- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஹோலி

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

ஹோலி என்பது பங்குனி மாதத்தில்(மார்ச்-ஏப்ரல்), பௌர்ணமி தினத்திற்கு முந்தைய 3 அல்லது 4 நாட்களில், வசந்த காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

தீமையை வென்ற நன்மையின் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு புராணக் கருத்துக்களைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமான ஒன்று, இந்தியாவில் வாழ்ந்த, ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய அரக்க அரசனுடன் தொடர்புடையது. ஹிரண்ய கசிபு, விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்ட, தன் மகன் பிரஹலாதனைக் கொல்ல தன் சகோதரி ஹோலிகாவை அனுப்பினான். ஹோலிகா நெருப்பில் எரியாத வரம் பெற்றிருந்தாள். தன்னுடன் பிரஹலாதனைத் தீயில் அமர்த்தி கொல்ல முயன்றாள். இருப்பினும், விஷ்ணுவின் அருளால், பிரஹலாதன் காயமடையவில்லை, ஆனால் ஹோலிகா எரிந்து இறந்தாள்.

இன்றும், ஹோலிக்கு முந்தைய இரவில், பிரஹலாதன் காப்பாற்றப்பட்டதன் நினைவாகவும், தீய ஹோலிகாவை எரித்ததன் நினைவாகவும் நெருப்பு ஏற்றப்படுகிறது. மறுநாள் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுகிறார்கள். இது அன்பு, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் சின்னமாகும்.

இந்தப் பிரிவில், விளையாட்டுகள், கலை மற்றும் கைவினை யோசனைகள், திருவிழா தொடர்பான கதைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

[/vc_column_text][/vc_column][/vc_row]