வரிகள்
- நளிநீ – தலகத – ஜல – மதி – தரலம்
- தத்வத் – ஜீவித மதிசய – சபலம் I
- வித்தி வியாத்யபிமான – க்ரஸ்தம்
- லோகம் ஸோக ஹதம் ச ஸமஸ்தம் II
பொழிப்புரை
தாமரை இலையின் மேலுள்ள நீர்த் திவலை சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் மிகவும் சஞ்சலமானது. நிலையற்றது. உலகம் முழுவதும் நோயாலும், அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதென்றும், வருத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்றும் உணர்வாயாக. நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே என்பது கருத்து..
[vc_column][vc_custom_heading text=”விளக்கவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1611839653168{margin-top: 15px !important;}”]நளிநீ தலகத | தாமரை இலை மீதுள்ள |
---|---|
ஜலம் | நீர்த்துளி |
அதி தரலம் | மிகவும் சஞ்சலமானது |
தத்வத் | அதுபோல |
ஜீவிதம் | வாழ்க்கை |
அதிசய | மிகவும் |
சபலம் | சஞ்சலமானது |
சமஸ்தம் லோகம் ச | எல்லா உலகையும் |
வ்யாதி அபிமான | நோய் , கர்வம் என்பவைகளால் |
க்ரஸ்தம் | விழுங்கப்பட்டதாகவும் |
சோகஹதம் ச | வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும் |
வித்தி | அறிவாயாக |