ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்-வாழ்வும் உபதேசங்களும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் – வாழ்வும் உபதேசங்களும்

















முகவுரை
“ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்வு அனுஷ்டானத்தில்உள்ள சமயத்தின் வரலாறாகும். அது நாம் கடவுளை நேருக்கு நேர்பார்ப்பதற்கு உதவுகிறது. இறைமைத் தன்மை, தெய்வீகம்இவற்றின் வாழும் திருவுருவமாக அவர் விளங்கினார்.”
– மகாத்மா காந்திஜி
ராமகிருஷ்ணர் தம் வாழ்வில் சமய உண்மையையும் கடவுள்இருப்பையும் நிரூபித்தார். ஏறக்குறைய நம்பிக்கையற்ற ஆனால்ஆர்வமுடைய இளைஞனான நரேந்திரநாத் தத்தர்,ராமகிருஷ்ணரை, “மஹாசய (ஐயா), நீங்கள் கடவுளைப்பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டபோது ராமகிருஷ்ணர் ‘ஆம்நான் இங்கு இப்போது உன்னை எப்படிப் பார்க்கிறேனோ அப்படிஅவரைப் பார்க்கிறேன்’ ஆனால் இன்னும் நன்கு ஆழ்ந்துபார்க்கிறேன் என்றார். பின்னால் ராமகிருஷ்ணர் இறைவனுடையகாட்சியையும்,அருளையும் நரேந்திராநாத்துக்குக்காட்டியருளினார். நரேந்திரநாத் பின்னால் உலகமனைத்துக்கும்மதநம்பிக்கையைப் பற்றி பறைசாற்றுபவராக ஆனார்.
‘எல்லா சமயங்களும் உண்மையானவை, அவை கடவுளைஅடைவதற்குரிய பல்வேறு பாதைகள்தாம். சமயம் என்பது வெறும்நம்பிக்கையில் இல்லை, ஆனால் அனுபூதியில் இறைவனைஉணர்வதில் இருக்கிறது.’ என்பதை ராமகிருஷ்ணர் நிரூபித்தார்.
லோகாயத வாதத்தால் குருடாக்கப்பட்ட உலகத்தை உயர்த்தவல்ல பலம் வாய்ந்த ஆன்மீக சக்தியாக ராமகிருஷ்ணர் விளங்கினார். இந்தியக் கலாசாரம், ஆன்மீகம் இவற்றின் திருவுருவமாகவும் சின்னமாகவும் அவர் விளங்கினார். இந்துகளின் நம்பிக்கை பெருமளவிற்கு அசைக்கப்பட்டு நாட்டில் ஐரோப்பியக் கலாசாரம், நாகரீகம் நுழைந்ததின் விளைவாக உண்டானநீதிநெறிக்குலைவு ஆன்மீகத் தாழ்ச்சி என்னும் சகதியில் நாடுஅமிழ்ந்து கொண்டிருந்த போது, அவர் இந்து மதத்தின் அழகு,பெருமை, பலம் இவற்றை இந்துக்கள் காணும்படி செய்தார்.
ராமகிருஷ்ணர் இந்து மதத்தைப் பேரழிவிலிருந்துகாப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தின் அதிசயமான முன்னேற்றத்தால் ஏற்பட்ட பொருள் வளர்ச்சியால் பிரமித்து உலகைஆட்கொண்டு வளர்ந்து வரும்சமயஅவநம்பிக்கை,தொன்மையான கொள்கைகளில் சந்தேகம் இவற்றுக்கு எதிராகஎல்லா சமயங்களையும் புனருத்தாரணம் செய்வதற்கும் உதவினார்ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்று போற்றப்பட்டது மிகவும்பொருத்தமானதாகும்.
எல்லாமதங்களைச்சேர்ந்தநூல்கள்தம்உண்மைநிரூபணத்தையும் நிறைவையும் இராமகிருஷ்ணரில் கண்டன. பரமஹம்ஸர் என்பவர் தன் உய்த்துணரும் காட்சியால் உடலில் வேறானதும் தனியானதுமான ஆத்மாவை, புறப் பொருளுக்குப்பின்னுள்ள ஆத்மாவை, உலகத் தோற்றத்துக்குப் பின்னுள்ளகடவுளை உய்த்துணர்பவர். கடவுளது அனுபவத்தில் மட்டுமேஅவர்ஆனந்தப்படுபவர் ஆவார். ஓர் அன்னமானது நீரிலிருந்துபாலைப்பிரித்து, குடித்து, பாலை மட்டும் அனுபவிக்கவல்லது என்றுசொல்லப்படுவதுபோல் அவர் கடவுளை அனுபவித்தார். எல்லாமதங்களின் சாஸ்திரங்களும், அவை ஒன்றையும் இராமகிருஷ்ணர்படித்திராவிட்டாலும், அவரில் நிறைவினையும் காரணத்தையும்பெற்றன. அவர் எல்லா சாஸ்திரங்களின் ஒளிமிக்க ஞானத்தின்திருவுருவாக இருந்தார். அவரது வாழ்வு, வைராக்யமென்ற துறவு,பக்தி, ஞானம் ஆகிய மூன்று நீரோட்டங்களின் புனித (திரிவேணி)சங்கமமாக இருந்தது.
அவரது பிறப்பும் இளமையும்
இராமகிருஷ்ணரின் பெற்றோர்கள், வங்காளத்தில் ஹுக்ளிஜில்லாவில் ‘தேரேபூர்’ கிராமத்தில் வசித்து வந்த குதிராம்சட்டோபாத்யாயர், அவரது மனைவியான சந்திரமணி என்றபக்தியுள்ள அந்தணத் தம்பதிகள் ஆவர். அவரது நில உடைமைசுமார் 50 ஏக்கர்கள் ஆகும். அவர்களது குலதெய்வமான ஸ்ரீஇராமச்சந்திரரை பக்தியுடன் வழிபாடு செய்து கொண்டு தமதுஉலகக்கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியுள்ள தம்பதிகளாக இருந்தனர். ஆனால் 1814ம் ஆண்டில்குதிராமின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் அக்குடும்பத்தின் தலைவிதியையே மாற்றியது. அவர் உள்ளூர் ஜமீன்தாரின் வீட்டில்குடியிருப்பவர்களில் ஒருவருக்கெதிராகக் கொண்டு வரப்பட்டவழக்கிற்கு ஆதரவாகப் பொய் சாட்சியம் கூறுமாறு ஜமீன்தாரால்பணிக்கப்பட்டார்.இது பொய் சத்தியம் செய்வதற்க்குச்சமானமாவதால், குதிராம் இவ்வாறு செய்ய மறுத்தார். இதனால்அவர் மனச்சாட்சியற்ற ஜமீன்தாரின் கோபத்திற்கு ஆளாகி, அந்தஜமீன்தார் குதிராம் தனக்கு மிகுந்த பணம் கடன்பட்டுள்ளார் என்றபொய் வழக்கில் அவரை ஈடுபடுத்தினார். இவ்வாறு ஜோடிக்கப்பட்டகுற்றச்சாட்டுக்கு ஆதரவாகஅந்தஜமீன்தார்பொய்ச்சாட்சியங்களையும் கொண்டு வந்து அதன் மூலம் குதிராமின்நிலங்களையும் கைப்பற்றிக் கொண்டார். குதிராம் தமது பாரம்பரியவீட்டை விட்டு விலக வேண்டியிருந்தது; வறுமையுற்ற குதிராம்பக்கத்திலுள்ள ‘கமார் புகூர்’ கிராமத்தில் தமது வீட்டை அமைத்தார்.
கமார்புகூரில் அவரது நண்பர்களில்ஒருவரின்உதாரகுணத்தினால் அவருக்கு, பயன்படுத்த அரை ஏக்கர் நிலம்கிடைத்தது. ஒரு சமயத்தில் செல்வம் மிகுந்திருந்த குடும்பம்இப்போது இந்தச் சிறு நிலத்திலிருந்து வரும் குறைந்தவருவாயினைக் கொண்டு சமாளிக்கும்படியான ஒரு நிலைஏற்பட்டபோதிலும், அவர்களது பிரபு ஸ்ரீராமரின் மேல் வைத்த நம்பிக்கைதளரவில்லை; மனத்திருப்தி குறையவில்லை. கமார்புகூர் கிராமம்பூரி ஜகன்னாதருக்கு இட்டுச் செல்லும் பாதையில் அமைந்திருந்தால்பூரிக்குச் செல்லும் வைஷ்ணவ யாத்ரிகர்களும் ஸந்நியாசிகளும்துறவிகளும் கமார்புகூரில் உள்ள தர்ம சாலைகளில் தங்கினர். இதனால் குதிராமுக்கு அவர்களது புனித சத்சங்கத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டியது. இது அவரை ஆன்மீகத்தில் மிகுந்த அளவுவளப்படுத்தியது.
ஒரு நாள் பக்கத்துக் கிராமத்திலிருந்து திரும்புகையில் ஒருநெல்வயலில் தன் குலதெய்வமான ரகுவீரரின் சின்னமொன்றைகுதிராம் அடையப் பெற்றார். இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தந்தது. இறைவனே அவரைத் தேடி வந்ததாக உணர்ந்தார். அவரதுபூஜையறையில் அந்தப் புனித விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்து,அவரும் அவரது மனைவியும் அதனை வழிபாடு செய்யஆரம்பித்தனர்.
அச்சமயத்தில் குதிராமுக்கு ‘இராம்குமார்’ என்ற பெயருள்ளமகனும் கூட ஒரு மகளும் இருந்தனர். நாளடைவில், இராம்குமார்இந்து மரபிலுள்ள அனைத்திலும் (Hindu Lore)மிகவும் தேர்ச்சிபெற்றார். இதனால் சிறிதளவு வருவாய் திரட்டி, தந்தையாரின்சுமையைஓரளவு அவரால் குறைக்கமுடிந்தது. இராமேஸ்வரத்திற்கு யாத்திரை செல்ல நேரமும் சந்தர்ப்பமும் கூடகுதிராமுக்குக் கிடைத்தன. பின்னால் அவருக்குப் பிறந்தஇரண்டாவது மகன் இராமேஸ்வரத்திலுள்ள சிவபெருமானின்ஆசீர்வாதத்தின் பயன் எனக்கொண்டு, குதிராம் அவனுக்கு இராமேஸ்வர் எனப் பெயரிட்டடார்.
சுமார் 11 வருடங்ளுக்குப் பிறகு, அதாவது 1835-ல் குதிராம்கயைக்குப் புனித யாத்திரை சென்றார். இங்கு, பித்ருக்களுக்குஉரிய புனித சடங்குகளைச் செய்த பிறகு, இரவில் அவர்அபூர்வமான ‘தெய்வீக காட்சி’ (Vision)ஒன்றை கண்டார், அவர்கதாதரர் விஷ்ணுவின் கோவிலில் இருப்பதாகவும் அங்கு அவரதுமுன்னோர்கள் (பித்ருக்கள்) அவர் அளித்திருந்த புனிதநிவேதனங்களை விருந்துண்பதாகவும் கனவு கண்டார். திடிரென்று,அந்தப் புனித ஸ்தலத்தின் உட்புறம் முழுவதும் தெய்வீகஒளிவெள்ளம் நிறைந்தது; அங்கு தெய்வீகத் திருவுருவம் ஒன்றுசிம்மாஸனத்தில் அமர்ந்திருக்க அவர் முன் முன்னோர்களின்ஆவிகள் முழந்தாளிட்டு வணக்கம் செலுத்தின.
சிம்மாஸனத்தில் அமர்ந்திருந்த பேரொளி மிகுந்த அந்தத்திருவுருவம், குதிராமை சைகை காட்டி, அழைக்க, குதிராம்அவரருகில் சென்று அவர் முன் நெடுஞ்சாண்கிடையாகவணங்குகையில் பேரொளிமிக்க அவ்வுருவம், “குதிராம்! உனது உண்மையான பக்தியினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! உன்னை எனது தந்தையாக ஏற்றுக் கொண்டு உனது குடிசையில்பிறப்பேன்” என்று சொல்லக் கேட்டார். இதயம் மகிழ்ச்சியினால்துடிக்க, குதிராம் கண் விழித்தார். ஏதாவது ஒரு வழியில் தனதுகுடும்பத்தை தெய்வீக புருஷர் ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்தார்.ஏறக்குறைய அதே சமயத்தில் சந்திராதேவியாரும் கமார்புகூரில் அபூர்வமான தெய்வீகக் காட்சிகளை அடைந்து கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று: வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோவிலின் முன்தானி (கிராமக்கொல்லன்மனைவி)யுடன் நின்று கொண்டிருந்த பொழுது, சிவபெருமானின் திருவுருவத்திலிருந்து பிரகாசமான தெய்வீக ஒளிக்கதிர் ஒன்று கிளம்பி தனக்குள் நுழைவதைப் பார்த்தாள். இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கு வழிக்காட்டியவரான இராமகிருஷ்ணரென்று உலகம் பிற்காலத்தில் அறிந்த ஒரு மகனை 1836-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18-ம் தேதிஅதிகாலையில் சந்திராதேவி பெற்றெடுத்தார். தங்க ஒளியில்பளபளக்கும் உடலுடன் மிகவும் வசீகரமாக இருந்த குழந்தைக்கு மிக அற்புதமான எதிர்காலம் உண்டு என கிராமத்திலுள்ள ஜோதிட நிபுணர்கள் தீர்க்கதரிசனம் செய்தனர். அக்குழந்தைகயையில் உள்ளகடவுளின் அருளால் பிறந்ததால் அந்தக் கடவுளின் பெயரான ‘கதாதரர்’ எனப்பெயரிடப்பட்டான்.
கதை என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட அக்குழந்தை தன்மதுரமான பார்வைகளால் அந்தக்கிராம மக்களுக்கு மிகவும்ப்ரியமுள்ளவனாக விளங்கினான். அவன் முன்னறிவு மிகுந்தகுழந்தையாகஇருந்தான்.குறிப்பிடத்தக்கக் கூடியஅறிவுள்ளவனாகத் திகழ்ந்தான். மிக விரைவாக ஹிந்துதுதிப்பாடல்களை மனனம் செய்து, கற்றுக்கொண்டான். அவன்கிராமப்பள்ளியில் படித்தான். கல்வியில் மிகுந்தமுன்னேற்றம்இருந்தது. கணக்கு மட்டும் அவனுக்கு மிக வெறுப்பாக இருந்தது.எல்லையற்றதில்லயித்து அதனையே வெளிப்படுத்த இருக்கும்அவனுக்கு, எல்லைக்குட்பட்ட எண்களின் மேல் வெறுப்புஇயல்பாகவே இருக்கக்கூடும் அல்லவா! ஆன்மீக வீரர்களின்வாழ்வையும் வாக்குகளையும் இந்தியப் புராணங்களையும்படிப்பதிலேயே மிகுந்த நேரம் செலவழித்தான். அவை அவன்மனதில் ஆழ்ந்து பதிந்து, பாதிப்பு ஏற்படுத்தின; ஆண்டுகள் செல்லச்செல்ல, அவனதுசமயஉணர்வுகள் மேலும் மேலும்தட்டியெழுப்பப்பட்டன; அவன் தியானத்தில் தன்னை இழந்து,சமாதியில் ஆழ்வதுண்டு. விரைவிலேயே, மதசம்பந்தமானவிஷயங்கள் மட்டுமல்ல, ஒரு அழகான இயற்கைக் காட்சியோ, ஏதோவொரு மனதைத் தொடும் சம்பவமோ அவன் தன்னைச்சமாதியில் இழக்கப்போதுமானது என்பது தெரியவந்தது. அத்தகையச் சிறுவயதுச் சம்பவங்களில் ஒன்றை பிற்காலத்தில் தன்சிஷ்யர்களிடம் கீழ்கண்டவாறு விவரித்தார்;
“ஒருநாள் ஆஷாட (ஜுன் -ஜுலை மாதம்) மாதத்தில், ஆறுஅல்லது ஏழு வயதில், நெல் வயல்களுக்கிடையில் செல்லும்குறுகிய வழியில், நான் சுமந்து கொண்டிருந்த கூடையிலிருந்துஅவல்பொரியைக் கொறித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன்.வானத்தை அண்ணாந்து பார்க்கையில், அழகான குமுறும்கருமேகத்தைக் கண்டேன். வான முழுவதும் அதுவேகமாகவிழுந்து மூடுகையில், அதன் கீழே பனிவெண்ணிற நாரைக்கூட்டமொன்று தலைக்கு மேலே பறந்து சென்றது. இந்த வண்ணவேறுபாடு மிகவும் அழகியதாக இருந்தால், என் மனம் தன்வசமிழந்து எங்கோ சென்றது. நான் உணர்விழந்தேன். பொரி நாலாபக்கமும் சிதறியது. சிலர் என்னை இந்நிலையில் கண்டு, கைகளால்வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். பரவச நிலையில் உணர்விழந்ததுஇதுதான் எனக்கு முதல் தடவை.”
மற்றொரு முறை கிராம நாடகத்தில் சிவராத்திரியன்று சிவவேடந்தாங்கி நடித்தார். தன் வேடத்தைப் பிரதிபலிப்பில் கண்டதுமேபரவசமாகி சமாதியிலாழ்ந்தார். பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகுந்த சிரமமாயிற்று. இறைவனைப்பற்றிச் சிறிதுஅன்புடன் நினைத்தாலும், இறைவனின் கை வண்ணத்தைவெளிப்படுத்தும் அளவில் இயற்கையின் அழகைச் சிறிதுஉணர்ந்தாலும்,அவரைப் பரவச நிலைக்கு இட்டுச் செல்ல போதுமானதாக இருந்தது.
1843ம் ஆண்டில் குதிராம் காலமானர். குடும்பத்தின்முழுப்பொறுப்பும் மூத்த மகனான ராம்குமாரின் தலையில்விழுந்தது. கதாதரர் தந்தை இறந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின்நிலையாமையையும் பற்றிதீவிரமாகஎண்ணலானார். அதன்பிறகு மாந்தோப்பிக்கோ, சுடுகாட்டுக்கோசென்று வெகுநேரம் தங்கலானார். அன்னையிடம் தனக்குள்ளகடமையை மறக்கவில்லை. கூடிய வரை தாய்க்குத் தொந்தரவு அளிக்காமலும், தாயின் மனத்துன்பத்தைக் குறைக்கவும், முடிந்த அளவு மகிழ்ச்சியை அளிக்கவும் முயற்சி செய்தார். கதாதரர்விரைவிலேயே ஆனந்தத்தின்புதியதொரு மூலத்தைக்கண்டுபிடித்தார். பூரிக்குச் செல்லும் வழியில் கிராமத்தின் தர்மசாலைகளில் பொதுவாகத் தங்கக்கூடிய அலைந்துதிரியும் சந்நியாசிகளின் கூட்டுறவுதான் அது. அவர்கள் கூட்டுறவில் ஆன்மீகவிஷயங்களைக் குறித்த விவாதங்களைக் கேட்டுக்கொண்டு தன்பெரும்பாலான காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். ஒருநாள்உடம்பு முழுதும் விபூதி பூசிக்கொண்டு தன் இடுப்பைச் சுற்றிகாஷாயத் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு கையில் நீண்டதடியுடனும் இன்னொரு கையில் கமண்டுலுவுடனும் ஒருஉண்மையான பால சந்நியாசி போலக் காட்சியளிக்கும் தன் அன்பு பையனைக் கண்டு சந்திராதேவி அதிர்ச்சி அடைந்தார். சந்தோஷப்படாமல் கவலையாலும் பயத்தாலும் அவள் கத்தினாள்: “என் அன்புக்குழந்தையே! யார் உன்னை சந்நியாசியாக மாற்றியது? எங்கு நீ செல்கிறாய்? நீ இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்?”அவரை இறுகக் கட்டிக்கொண்டு அவள் கதறியழத்தொடங்கினாள். “அம்மா நான் சந்நியாசியாக ஆகவில்லை. நான்சந்நியாசி ஆடையில் எப்படித் தோன்றுவேன் என உங்களுக்குக்காட்டி உங்களுக்குச் சற்று வேடிக்கையும் வினோதமும்அளிப்பதற்குத்தான் நான் விரும்பினேன்” என்று கூறி அவர் தாயாரைத் தேற்றத் தொடங்கினார். எப்படி இருப்பினும் தன்னுடையஅனுமதியின்றி அவர் சன்னியாசம் வாங்கிக்கொள்ளக்கூடாது. அவர் வாழ்வின் எந்தக் காலத்திலும் வீட்டைத் துறக்கக் கூடாதுஎன்னும் சத்தியத்தை தாயார் அவரிடமிருந்து மிகவும் வேண்டிப்பெற்றார். அவருடைய சிஷ்யர்கள் தம் வாழ்வில் சந்நியாசிகளாகஆனார்கள் என்பதை நாம் பார்க்கும்போது, அவர் ஏன் தம் வாழ்வில்கல்யாணம் செய்து கொண்டார் என்பதை இது விளக்குகிறது.
உண்மையில் ராமகிருஷ்ணருடைய திருமணம் ஆன்மீக நட்பு.சாதாரண உலகியற் பொருளில் கணவனும் மனைவியும் கொண்ட உறவன்று. ராமகிருஷ்ணர் தம் மனைவியான சாராதாதேவியை சக்திஅல்லது காளியின் தெய்வீகத் திருவுருமாகவே கருதி வழிபட்டார்.சாரதாதேவி அவருக்குத் தாய் போல் வாழ்ந்தாள்.
கதாதரருக்கு 9 வயது ஆனபோது காயத்ரி உபதேசத்துடன்அவருக்குப் பூணூல் போடப்பட்டது. இந்த சம்ஸ்காரத்துடன்மனிதன் ஆன்மீக வாழ்வில் மீண்டும் பிறக்கிறான், பிராமணனாகஆகிறான். இதன்பொருள் பிரம்மத்தை உணரும் பாதையை நோக்கிஅவன் திரும்புகிறான் என்பதாகும். எப்படி இருப்பினும் பூணூல்போட்டபோது ஆர்வமிக்கதோர் நிகழ்ச்சி நடந்தது. மரபுப்படி தன்தாயாரிடமிருந்து முதல் பிட்சையைப் பெறாமல், கொல்லன்வகுப்பைச் சேர்ந்த பெண்மணியான குழந்தைப் பருவத்திலிருந்துதன்னை மிகவும் அன்புடன் பேணிய தானி அம்மாளிடமிருந்து அவர்முதல் பிட்சையைப் பெற்றார். தனக்குக் குழந்தையில்லாததால்அவரைச் சொந்த மகன் போல அவள் நேசித்து வந்தாள். (அவளிடமிருந்து பிட்சையைப் பெறுவது) ஒரு பிராமணக்குடும்பத்தில் காலங்காலமாக வந்த வழக்கத்துக்கு மாறாகஇருப்பினும் கதாதரரும் தனது பிரேமையை அவளுக்குக் காட்டிஆனந்தத்தை அளிக்க விரும்பினார். உண்மை அன்பும் பக்தியும்சமூகப் பழக்க வழக்கங்களைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது. ஜாதியென்பது பிறப்பிலில்லை; இதயத்தின் குணங்களிலேயேஇருக்கிறது. அந்த சமயத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடுமட்டுமன்றி புராண விஷயங்களைக் குறித்து நாடகங்கள் நடத்துவதுகதாதரருடைய ஓய்வு நேர வேலைகளில் ஒன்றாக இருந்தது. தன்நண்பர்களுடன் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தின் பக்கத்திலுள்ளமாந்தோப்பில் அவர் நாடகங்களை நடத்துவது வழக்கம்அவருடைய மிகவும் ஜனரஞ்சகமான நாடகம் கிருஷ்ணருடையலீலைகளை நடித்துக் காட்டுதல். தன் அழகு நிறுத்துடனும், நீண்டகுழலுடனனும் கழுத்தில் ஒரு பூமாலை அணிந்து, உதடுகளில்புல்லாங் குழலை வைத்துக்கொண்டு கதாதரர் அடிக்கடி கிருஷணவேடத்தில் நடிப்பார். சில சமயங்களில் பையன்கள் கூட்டமாகசேர்ந்து பாடும் உரத்த சங்கீர்த்தனம் மாந்தோப்பு முழுவதும்ஒலிக்கும், எதிரொலிக்கும். இப்பொருள்களால் உண்டானபேருணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் அடிக்கடிசமாதிநிலையை அடைவார். ராமகிருஷ்ணர் இந்த அனுபவத்தைத் தன்அன்பர்களுக்கு விளக்குவார்: என்ன நிகழ்கிறது என்று உங்களுக்குதெரியுமா? என் இதயத்தில் கடவுளைப்பற்றி நான் ஆழ்ந்துநினைக்கும்போது நான் அங்கு அவர் இருப்பை உணர்கிறேன்அவர் என்னை அன்போடு உள் முகமாக இழுப்பது போல நான்உணர்கிறேன். பிறகு நான் என் வெளிப்புற உணர்வை இழக்கஆரம்பிக்கிறேன்.உள்முகமான பேரானந்தத்தையும்பேரமைதியையும் உணர்கிறேன். பையனுடைய இந்தப்பரலோகமனப்பான்மை அவருடைய தாயாருக்கும் அண்ணன்மார்களுக்கும்பெருங்கவலையை உண்டாக்கியது. ராமகிருஷ்ணர் காக்கைவலிப்பால் கஷ்டப்படுகிறார் என்று மக்கள் நினைப்பதும் உண்டு.
எப்டியிருப்பினும், விரைவில் துரதிருஷ்டம் குடும்பத்தைப்பீடித்தது. வயதான பாட்டியார் பார்த்துக்கொள்ளும் நிலையில்கைக்குழந்தையை விட்டுவிட்டு ராம்குமாரின் மனைவி இறந்தாள்.ராம்குமாரின் சொற்ப வருமானமும் குடும்பப் போஷணைக்குப்போதவில்லை. இதனால் குடும்பத்தில் மேலும் மேலும் கடன்கள்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. இன்னும் நிறைய வருமானம்சம்பாதிக்கலாம், இதனால் குடும்பம்வருமானத்தொல்லைகளை நீக்கிக்கொள்ளலாம் என்று ராம்குமார்முடிவெடுத்தார். பெருநகரின் மையப்பகுதியில் அவர் ஒருசமஸ்கிருதப்பள்ளியை ஆரம்பித்தார். கிராமத்தில் ராமேஸ்வரர்வீட்டைப் பார்த்துக்கொண்டார். தன் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு(எல்லாவற்றையும் விட்டு) தனது ஆன்மீக நாட்டத்தில் கதாகரர்மேலும் மேலும், ஆழ்ந்து வந்தார். பள்ளிப்படிப்பில் அவரதுவெறுப்பு மேலும் மேலும் அதிகமாகி வந்தது. அவர் தம் வாழ்வில்ஒரு மிகப் பெரும்பணியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டுள்ளார்என்பது அவர் மனதில் ஏற்கனவே நன்கு பதிந்திருந்தது போலத்தோன்றியது. கடவுளை உணர்தல் மட்டுமே பின்பற்ற தகுதியுடையஒரே லட்சியமாக அவருக்குத் தோன்றியது. எப்படி இருப்பினும் தன்வயதான ஏழைத்தாயாரிடம் அவர் கொண்டிருந்த அன்புப்பிணைப்புதன்ஆன்மீக நாட்டத்தால் வீட்டை, விட்டுவிட்டு ஓடாமல்அவரைத்தடுத்தது.
கல்கத்தாவுக்கு:
ராம்குமாரின் பள்ளி சிறிது முன்னேறியது. பள்ளியின்வளரும் பணியைக் கவனிக்க அவருக்கு உதவி தேவைப்பட்டது.பள்ளிப்படிப்பில் கதாதரருக்கு இருந்த நாட்டமற்ற போக்கைக்கவனித்து, ஓரளவு உதவிக்காகவும், அதற்கும் மேலாக கதாரரின்படிப்பைக் கண்காணித்து அவரைச் சரியான வழியில் செலுத்தமுடியலாம் என்னும் நம்பிக்கையுடனும் அவர் கதாதரரைத் தம்முடன்கல்கத்தாவுக்கு இட்டுச்சென்றார்.
கல்கத்தாவில்கூட கதாதரர் தம் பள்ளிப்படிப்பில் பெரும்அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தன் சகோதரரால் தன்னிடம்ஒப்படைக்கப்பட்ட சில மக்களின் வீடுகளில் புரோகிதராகப் பூஜைசெய்யும் வேலையை மட்டும் முழு அக்கறையுடன் எடுத்துக்கொண்டார். அவரது இனிமை, நேர்மை, ஆட்கொள்ளும்குணங்கள், பக்தி இவை ஒவ்வொருவர் மனதிலும் பதிந்து,ஒவ்வொருவரையும் கவர்ந்தது. மிக விரைவில் (மதிப்பிற்குரியகுடும்பங்களைச் சேர்ந்த மக்களனைவரும்) அவரைச் சுற்றிஅவரைப் போற்றுபவர்களும் நண்பர்களுமான குழு ஒன்று திரண்டுவிட்டது; அவர்களனைவரும் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருதடவை ராம்குமார் கதாதரரைத் தீவிரமாகப்படிக்காததற்குக் கடுமையாகக் கண்டித்தபோது, அவர் உணர்வுபூர்வமாகப் பதிலளித்தார்; ‘அண்ணா! வெறும் வயிற்றுப்பிழைப்புக்கான கல்வியை வைத்துக் கொண்டுநான் என்னசெய்வேன்! என் இதயத்தை ஒளி பெறச் செய்யும். என்னைஎப்போதும் திருப்தியுறச் செய்யும் ஞானத்தை இதற்குப் பதில்அடைவேன்.” இந்த நேரிடையான தீர்மானமான பதிலைக்கேட்டுராம்குமார் குழப்பமடைந்தார்.கதாதரர்தன் படிப்பைத்தொடர்வதற்கு வற்புறுத்துவதில் தோல்வியுற்ற அவர் தன் குலதெய்வமான ரகுவீரரின் திருவுள்ளத்திற்கே எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டார்.
தட்சிணேஸ்வரத்துக்கு:
அந்த சமயத்தில் ராணிராஸ்மணி என்ற பெயருடைய மிகுந்தபக்தியுடைய ஒரு பணக்கார விதவை வாழ்ந்து வந்தாள்.கல்கத்தாவின் வடக்கில் சுமார் நாலு மைல் தூரத்திலுள்ளதட்சினேஸ்வரத்தில்கங்கையின் கிழக்குக் கரையில்மஹாகாளியின் கோயிலைக் கட்டுவதற்கு அவள் நிறைய பணம்செலவழித்தாள், நீண்ட சதுரசுற்றுக் கட்டு வெளியிடத்தின் மத்தியில்காளியின் பெரிய கோவில்நிற்கிறது. இன்னொரு கோவில் கிருஷ்ணனுக்கும் ராதைக்கும்கட்டப்பட்டது. இரண்டுவரிசைகளில்அமைந்த 12 சிவன் கோவில்களுக்கிடையில் இரண்டு கோயில்களும் ஒரு திறந்த மேல்தளத்தால் இணைக்கப்பட்டன. கோவில்களுடன் ஒரு பெரிய இசைமண்டபம், கோவிலில் வேலை செய்பவர்களுக்கு அறைகள்,ராணியின் குடும்பத்தினருக்குத் தங்குமிடங்கள் இருந்தன. இரண்டுகுளங்களுடன் ஒரு அழகான தோட்டம் இருந்தது. இராமகிருஷ்ணரின் வாழ்வில் பின்னால் பெரும் பங்கு வகிக்கப் போகும்ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது.
1855-ம் ஆண்டு மே மாதம் 31-ம் நாளன்று, அந்தகோவிலின்கும்பாபிஷேகவிழாநடைபெற்றதும்ராம்குமார் அர்ச்சகராகப்பொறுப்பேற்றுக் கொண்டார். தட்சிணேஸ்வரத்தின் புனிதக்கோயில்தோட்டத்தின் அமைதியான, சுமுகமான சூழ்நிலையில் கதாதரரும்தன் அண்ணனுடன் தங்கினார். அங்கு அவர் நிம்மதியாகஇருந்ததுடன், தனது ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடருவதற்குஅதிக வாய்ப்புகளும் கிடைத்தன. இராமகிருஷ்ணரின் வாழ்விலும்,இந்தியாவின் சமய மறுமலர்ச்சியிலும் பற்பல ஒளி மிகுந்தசம்பவங்கள் இங்குதான் தொடங்குகின்றன.
அதே சமயத்தில்தான் அடுத்து 25 ஆண்டுகளுக்குஇராமகிருஷ்ணருக்கு நெருங்கிய துணைவனாக இருந்த, அவரது தீவிரசாதனையின் போது மிகவும் ஆர்வத்துடனும், விசுவாசத்துடனும் அவருக்குப் பணிபுரியும் பெரும் பேறு பெற்றஹிருதய் என்ற இளைஞன் வந்தடைந்தான். அவன் கதாதரரின்மருமகன்; கதாதரர் அதனால் பெருமகிழ்ச்சி அடைந்தார். இராணி ராஸ்மணியின் மாப்பிளை மதுரநாத் பிஸ்வாஸ் (மதுர்பாபு)ஸின் பார்வை கதாதர்மேல் விழுந்தது. காளியின்விக்ரகத்துக்கு பூவும், மலரும், சந்தனக்குழம்பும் கொண்டுகாலையில் அலங்கரிக்கும் பொறுப்பையும், உடைகள்.மற்றும்விலைமதிப்புள்ள நகைகளால்மாலையில்அலங்கரிக்கும்பொறுப்பையும் கதாதரிடம் ஒப்படைத்தார். இது கதாதருக்குப் பொருத்தமான பணி. உடல், பொருள், ஆவி அனைத்தையும்அர்ப்பணித்து இப்பணியை கதாதர் செய்ததுடன், மற்றநேரங்களிலெல்லாம் லோக மாதாவைப் போற்றிப் பாடல்கள் பாடிய வண்ணம் இருந்தார்.
காளி கோயிலில் நியமனம் செய்யப்பட்ட சிலநாட்களுக்குப்பிறகு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்மூலம்,ராணிராஸ்மணியும் மாதூர் பாபுவும் இராமகிருஷ்ணரிடம் பெருமதிப்புப் கொண்டார்கள். ஒருநாள், ராதா கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர், கிருஷ்ணனின் உருவச் சிலையைப் பள்ளியறைக்குக் கொண்டு செல்லும் வேளையில் கால் வழுக்கிக் கீழே விழுந்தார்.சிலையின்ஒருகால் உடைந்தது. அந்தச் சிலையை கங்கையில் எறிந்து விட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் புதுச்சிலையைப்பிரதிஷ்டை (வழிபாட்டுக்கு உரியதாக மந்திரங்கள் கூறிஅமர்த்துதல்) செய்ய வேண்டும் என்றும், மரபின்படி உடைந்தசிலைவழிபாட்டுக்கு உரியதல்ல என்றும் சில பண்டிதர்கள் அறிவுரைகூறினர். இராமகிருஷ்ணர் குறுக்கிட்டு இது கேலிக்குரியது என்றுகூறினார். ராணிராஸ்மணியின் மருமகன் தன் காலைஉடைத்துக்கொண்டால், ராணி அவரைப் புறக்கணித்து,வேறொருவரை ஏற்றுக் கொள்வாரா? அவருக்குச் சிகிச்சை செய்யஏற்பாடு செய்ய மாட்டாரா? அதே போல, நாம் ஏன் இங்கும்செய்யக்கூடாது? ஆகவே இந்த உருவச்சிலையைச் சீர் செய்து,முன்போல அதையே வழிபடுவோம் என்று கூறினார். அவரே அதன்காலை சரி செய்யப் பொறுப்பேற்றுக் கொண்டு, திறம்படச்சீர்செய்தார். யார் மிக உன்னிப்பாகக் கவனித்தாலும், எங்கு முதலில்உடைபட்டது என்று நிர்ணயிக்க இயலவில்லை. இராணியும், மதுர்பாபுவும் மிக்க மகிழ்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தார்கள். இதன்பிறகு, இராமகிருஷ்ணரே இராதா கிருஷ்ணர் கோவிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
இராம்குமார், காளிகோயில் வழிபாட்டில் உள்ள விவரமான,நுணுக்கமான சடங்குகளில் தேர்ச்சி பெற்ற கேனாராம் பட்டாசார்யாஎன்பவரைக் கொண்டு இராமகிருஷ்ணருக்கு தீட்சை அளிக்க (வழிபாட்டுச் சடங்குகளிலும், மந்திர உச்சாரணங்களிலும் தேர்ச்சியளித்தார்) ஏற்பாடு செய்தார். இராமகிருஷ்ணர் காளிவழிபாட்டுக்கு முழுப்பொறுப்பு ஏற்றால், உடல் நலிந்துகொண்டிருக்கும் தனக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும் என்று இராம்குமார் நம்பினார். சில நாட்களுக்குப் பின் இராம்குமார்காலமானபோது, இராமகிருஷ்ணர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வாழ்க்கையின் நிலையாமை அவருக்கு வெளிப்படையாகப்புலப்பட்டது. அழியாத ஒன்றை அறிந்துணர வேண்டுமென்றஆர்வமும், நிலையான இருப்பைப்பற்றிய (Reality) நிரந்தரத்தோற்றத்தைப் பெற வேண்டுமென்ற ஆர்வமும் அவரிடம் ஆழமாகிஅவரை எரித்தன.
இராமகிருஷ்ணருக்கு, காளியின் திருவுருச்சிலை வெறும்கற்சிலையல்ல, உயிருள்ள உலக மாதா. அவள், உக்கிர அம்சமும்மங்கள அம்சமும் ஒருங்கிணைந்தவள். இயற்கையின் ஆக்கசக்திகளும், அழிக்கும் சக்திகளும் அவளிடம் உள்ளன என்றநம்பிக்கை நிலவியது: ஆயினும் அவரைப்பொறுத்தவரையில்,அவள் முழுமையான அன்புள்ள அன்னை; ஆற்றலும், மங்களநல்லாசிகளும் நிறைந்தவள்; இனிமையும், மென்மையும், தாயின்அக்கறையும்கொண்டவள்; அன்புள்ளஅக்கரையுடன்பக்தர்களைத் துன்பத்திலிருந்துகாப்பாற்றுபவள்.அறியாமையிருளையும், குழப்பத்தையும் விலக்கத்தகுந்தஉண்மையான வழிகாட்டி என்று உறுதிகொண்டு தனது ஆவிமுழுவதையும் அவளுக்கே அர்ப்பணித்தார்; வழிபாட்டில் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்தார்.
அன்னையைப் பற்றிய அகக்காட்சி
இராமகிருஷ்ணர், தீமையை எரிக்கும் சாதனா முறையில்முழுமையாக ஆழ்ந்தார். இரவில் அனைவரும் உறங்கச்சென்றபின், அடர்ந்த காட்டினுள்சென்று, மறுநாட்காலையில்,வெகுநேரம் தியானம் செய்ததாலோ, மிகவும் அழுததாலோ ஏற்பட்டவீங்கிய கண்களுடன் திரும்புவார். “அம்மா நீ எங்கிருக்கிறாய்?என் முன்னே நீ தோன்ற மாட்டாயா?” என்று அழுது புலம்புவதுவழக்கம். தினமும் மாலைப்பொழுது கழிந்ததை, கோவில்மணிஓசைஅலைகள் தேய்ந்து, நலிந்து, தெரிவித்தபோது,“இன்னொரு நாள் வீணாகக் கழிந்ததே, அம்மா, இன்னும்உன்னைக் காணவில்லையே! கல்லில் பட்ட நுரைபோலஇன்னொரு நாளும் மெல்லக்கழிந்ததே, இன்னும் பேருண்மையைஅறிகிலேனே” என்று அவர் மனம் கவன்று, கதறிஅழுவார்.தாங்கவொண்ணாததுயரத்தின் எல்லை கடக்கும் நிலையில், திரைவிலகியது. லோக மாதாவை அகத்தினுள் கண்டு நல்லாசி பெற்றுப்பரவசமுற்றார். இராமகிருஷ்ணர் அக்காட்சியின் முதல் அனுபவத்தைப்பிற்காலத்தில் சீடர்களுக்கு வருணித்தார்;
“அன்னையின் காட்சி கிடைக்கப் பெறாததால் நான் தாங்கமுடியாத மன வலியுடன் துன்பப்பட்டேன்! நனைந்த துண்டைஇறுக்கிப் பிழிவதுபோல, யாரோ என் இதயத்தை இறுக்கிப்பிழிவதாகத் தோன்றியது. அளவில்லாத அமைதியின்மையால்ஆட்கொள்ளப்பட்டு, இவ்வாறே தொடருமோ என்று அச்சமுற்றேன்.வாழ்க்கை வாழத்தகுந்தது அல்ல என்று தோன்றியது. திடீரென்றுஅன்னையின் கோயிலில் வைக்கப்பட்டிருந்த வாளின்மேல் என்பார்வை நிலைத்தது. தாவிக்குதித்து, என் வாழ்வை முடித்துக்கொள்ள அதை என் கையில் எடுத்தேன். அதே சமயம் அன்னை தன்தோற்றத்தை எனக்குக் காட்டியருளினாள். நான் உணர்விழந்துதரையில் வீழ்ந்தேன். அந்நாளும், அடுத்த நாளும், அதற்கடுத்தநாளும் என்ன நிகழ்ந்தன என்பதை நானறியேன். முன்பு அறியாத,கலப்பற்ற ஆனந்தத்தின் இடைவிடாத பெருக்கம் என்னுள்ளேநிகழ்ந்து கொண்டிருந்தது. என் அன்னை இறைவி – கூடஇருப்பதை நான் உணர்ந்தேன்.
இதற்குப்பிறகு, இராமகிருஷ்ணர் இக்காட்சியை எப்போதும்,இடைவிடாமலும் காண வேண்டுமென்று ஏக்கமடைந்தார்.அவ்வனுபவம் கிடைக்கப்பெறாததால், அடிக்கடி நிராசையின்ஆழத்துக்குச் சென்றார். இவ்வாறு தெய்வத் திருத்தாயின் “மறைத்துஅருளும்” அலகிலாத் திருவிளையாட்டை, மறுக்கவோ, பொறுக்கவோ, அவரால் இயலவில்லை. பிரார்த்தனை, தியானம்இவற்றுடன் கூடிய முயற்சிகளை அவர் தீவிரமாக்கினார். அகக்காட்சிகள் அடிக்கடி நிகழ்ந்தன. தனது பக்தர்களுக்கு வரம்அளித்துக்கொண்டு, அவர்களுக்கு அருள் புரிந்து கொண்டு தனதுஒப்பற்ற பேரொளி மிகுந்த திருவுருவத்துடன் தெய்வத்தாய் தனக்குமுன் நிற்பதைக் கண்டார்.
நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கும் போது காளியினுடையமூச்சு தன் கைமேல் படுவதைக்கூட அவர் உணர்வார்: தன்னுடையஅறையிலிருந்து காளிமாதா தன் கால் சலங்கைகள் ஒலிக்கும்படிஒரு சிறுமியின் விளையாட்டு உவகையுடன் கோவிலின் மேல்மாடிக்குச் செல்லும் சத்தத்தை அவர் கேட்க முடிந்தது. அப்போதுஅவர் அவளைத் தொடர்ந்து செல்வார். முதல் மாடியின்உப்பரிகையில் தன் நீண்ட கூந்தலுடன் நின்று கொண்டுகல்கத்தாவையோ கங்கையையோ நோக்கி அவள் நின்றுகொண்டிருப்பதை அவர் பார்ப்பார். இங்ஙனம் லோகமாதாதொடர்ந்து இல்லாவிட்டாலும் அடிக்கடி தன்னுடைய தோற்றத்தைஅவருக்குக் காட்டியருளுவார். இங்ஙனம் அனுபூதி ஆழ்ந்துஏற்பட, லோகமாதாவின் காட்சி மேலும் மேலும் ஒளிமிக்கதாகவும், சாட்சாத்காரமாகவும் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ராமகிருஷ்ணர்காளியின் விக்கிரகத்தை, சைதன்யத்தை உடையதாகக் கருதினார்.ஆனால் இப்போது விக்கிரஹம் மறைந்துவிட்டது; உயிருள்ள லோகமாதாவே நின்றாள். உண்மையில் மக்கள் அவரை முற்றிலும்பைத்தியம் என்று சந்தேகித்தனர்.
ஒருநாள் பூஜையின் போது ராணி ராஸ்மணி இருக்கநேர்ந்தது.அவரைக் காளியின் மேல் சில பிரார்த்தனைப்பாடல்களைப் பாடும்படி கேட்டுக்கொண்டார்.கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய இதயத்தின் ஆழத்திலிருந்து இசைபொங்கியெழுந்தது. விண்ணுலக இன்பத்தின் ஊற்றுப் போன்றுஆன்மாமுழுவதையும்பேருணர்வால்குளிப்பாட்டியது. சிறிது நேரங்கழித்து ராணி (நீதிமன்றத்தில்விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை நினைத்துக் கொண்டு)அப்பாட்டில் மறதியுற்றவளானாள். திடீரென ராமகிருஷ்ணர்பாடுவதை நிறுத்திவிட்டு, புனிதமான இடத்தை உலகியல்எண்ணங்களாலும் ஆசைகளாலும் மாசுபடுத்திய குற்றுத்துக்காககண்டித்தார். லோகமாதாவைப் போன்றுஎல்லாவற்றையும் உணரும், அறிவும் சக்தியும் உடையவராகராமகிருஷ்ணர் ஆகிவிட்டார் என்பதை ராணி உணர்ந்தாள்.
ஹடயோக சாதனைகள்:
இதற்குப் பிறகு அவர் ஹடயோக சாதனையை மேற்கொண்டார். அவர் சுடுகாட்டுக்குச் சென்று வெற்றுடம்புடன் மணிக்கணக்காக தியானத்தில் தினந்தோறும் அமர்வார். ஒருநாள்மாலை தன் நாக்கில் எரிச்சலை உண்டாக்கும் வலியை உணர்ந்தார்.ஒரு நிமிடத்துக்குப் பிறகு வாயில் இரத்தம் வழிய ஆரம்பித்தது.இரத்தம் கறுப்பு நிறமாக இருந்ததால் அவர் திகைத்தார். ஆனால், வயது முதிர்ந்த ஆன்மீகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற அங்கிருந்தயோகி ஒருவர் சொன்னார்: “கடவுளுக்கு நன்றி; கவலைக்குக்காரணமில்லை; இந்த இரத்தம் வழிதல் உங்களுக்கு மிகப்பெரும்நன்மையைச் செய்திருக்கிறது. உங்கள் சுஷும்னா நாடி திறந்துமூளைக்குப் பாய்ந்த ஓரளவு இரத்தம் அதிருஷ்டவசமாக வாயின்வழியாக வந்து விட்டது. இல்லாவிட்டால் நீங்கள் ஜட சமாதியைஅடைந்திருப்பீர்கள். அதிலிருந்து ஒரு போதும் நீங்கள் சாதாரணமனநிலைக்கு இறங்கியிருக்க முடியாது. தெளிவாக தெய்வீகத்தாய்உங்கள் மூலம் ஒரு பெரும் பணியை ஆற்ற இருக்கிறாள். ஆகவே அவள் உங்கள் உடலைப் பாதுகாத்திருக்கிறாள். உங்களை கடவுள் பாவனையில் இருந்து கொண்டு ஏதோ தெய்வீகப் பணியை நிறைவேற்றும்படி ஒரு வேளை விரும்புகிறாள் போலும்.’
ஸ்ரீராமருடைய தரிசனம்:
ராமகிருஷ்ணருக்கு விசால மனப்பான்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவர் இறைவனுடைய எல்லா நாமங்களுக்கும் வடிவங்களுக்கும் மதிப்பு வைத்திருந்தார். இறைவனுடைய ஒரு வடிவத்துக்கும் மற்றொன்றுக்கும் வேறுபாட்டை அவர்பார்க்கவில்லை. உண்மையினுடைய ஒரு அம்சத்தை உணரும் ஆர்வம், மற்றொன்றையும் எடுத்து மாறாத பக்தியுடன் உண்மையின் அந்த அம்சத்தைத் தரிசிக்கும் வரை கடைப்பிடிக்கத்தூண்டியது. இப்போது அவர் ஸ்ரீ ராமரை உணர்வதற்கு ஒருஉறுதியான ஆவல் கொண்டார். ஆகவே அனுமான் இராமர் மேல்வைத்திருந்ததாஸ்ய மனப்பாங்கை, உண்மையாகவே வளர்க்கும்பணியை ஏற்றார். அவர் முற்றிலும் அனுமாருடன் தன்னைஐக்கியப்படுத்திக் கொண்டார். மனிதனின் பழக்கங்களிலிருந்து,குரங்கின் பழக்க வழக்கங்களாக ஆகும்படி தன் பழக்கங்களையும் அவர் மாற்றிக்கொண்டார்.
கொட்டைகளையும் பழங்களையும் சாப்பிட்டுக் கொண்டுமரத்தின் மேலேறிக் கொண்டு ஒரு கிளையிலிருந்து இன்னொருகிளைக்குத் தாவிக் கொண்டு கூட அவர் வாழ்ந்தார்.இராமகிருஷ்ணரின் இந்தச் சாதனையின் விளைவாக, அன்னை சீதாபிராட்டியார் அவரைக் கருணையுடன் வந்து நோக்கும் தரிசனத்தை அவர் பெற்றார். பேரொளி பெற்ற வடிவம் பிறகு அவர் உடலுக்குள் பிரவேசித்தது. அதற்குப் பிறகு அவருக்கு ஸ்ரீராமருடையதரிசனமே கிடைத்தது.
ராமகிருஷ்ணருக்கும் சாரதாதேவிக்கும் திருமணம்:
ராமகிருஷ்ணரைப் பற்றி அதிசய வதந்திகளையும்அவருடைய நோயையும் பற்றிக் கேள்விப்பட்டு அவரை கமார்புகூர்வரும்படிக் கேட்டு அவருடைய தாயார் அவருக்குக் கவலையுடன்அடிக்கடிக் கடிதங்கள் எழுதினார். ராமகிருஷ்ணர் தாயாரின்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். தன்னுடைய சொந்த கிராமத்தின்அமைதி சூழ்ந்த ஆரோக்கியமளிக்கின்ற சூழ்நிலைக்கு மீண்டும்வந்தார். ஆனால் இங்கு கூட தன் யோக சாதனைகளைச் செய்வதைஅவர் விடவில்லை. எப்படி இருப்பினும் தாயாருடைய கவனம்அவருடைய ஆரோக்கியத்தைப் பெருமளவுக்கு மீட்டுத் தந்தது.
ராமகிருஷ்ணருக்கு அப்போது இருபத்தைந்து வயது.அவரது தாயாரும் அவரது அண்ணா ராமேசுவரரும் அவர் மணம்புரிய வேண்டும் என்று நினைத்தனர். மணம் புரிதலே அவரை உலகவாழ்வில் பிரியம்கொள்ளச் செய்யும் மிகச் சிறந்த வழிமுறை என்று அவர்கள் நம்பினர். அவர்கள் அவருக்கு ஏற்ற பெண்ணைத் தேட ஆரம்பித்தனர். ஆனால் யார் ‘பைத்தியக்காரப் பையனுக்குத் தன்பெண்ணைக் கொடுப்பார். அவர்கள் மனமொடிந்து தளர்ச்சியுற்றனர். அவர்கள் கவலையாலும், மனத் தளர்ச்சியாலும் அவதியுறுவதைக் கண்டு இரக்கமுற்ற இராமகிருஷ்ணர் கூறினார்: “நீங்கள் இங்குமங்கும் ஏன்முயற்சி செய்கின்றீர்கள். ஜயராம்பாடிக்குச் செல்லுங்கள். ராமச்சந்திர முகோபாத்யாயர் வீட்டில் எனக்கென இறைவன் நியமித்தபெண்ணை நீங்கள் காண்பீர்கள்.” கமார்புகூரிரிருந்து 3 மைல்தொலைவிலுள்ள ஜயராம் பாடிக்குச் சென்று அவர்கள் விசாரித்தபோது, இக்குறிப்பு உண்மையெனத் தெரிந்தது. ஆறுவயதுள்ள சிறுமி அங்கிருந்தாள். சிறுமியின் பெற்றோர்களும் ராமகிருஷ்ணருக்குப் பெண்ணைக் கொடுக்க உடனடியாக ஒப்புக்கொண்டனர். திருமணம் முறையாக நடைபெற்றது. கல்யாணம் முடிந்த பின்பு, மணப்பெண் தன் பெற்றோர்களிடம் திரும்பினாள். ராமகிருஷ்ணர் கிராமத்தில் ஒன்றரை வருடம்தங்கினார். பிறகு தட்சிணேஸ்வரத்துக்குத் திரும்பி வந்தார்.
அதிலிருந்து ஆறு வருடங்கள் தன் சாதனையை அவர் தொடர்ந்தார்.இக்காலத்தில் அவர் பணத்தையும் ஜாதி வித்தியாசம் பாராட்டுவதையும் மிகவும் வெறுத்தார். துறவு மனப்பான்பான்மைஅவரை முற்றிலும் ஆட்கொண்டது.
ராமகிருஷ்ணரின் தாந்திரிக சாதனைகள்:
1861-ல் ஒரு பெரிய யோகினியாக இருந்து போற்றத்தக்க ஒரு பெண்மணி (தேடாமலேயே) ராமகிருஷ்ணரிடம் வந்தாள்,அவள் நடுத்தர வயதுள்ளவள். அவள் பெயர் பைரவி பிராம்மணி,பைரவி ராமகிருஷ்ணரைப் பார்த்தவுடனேயே ஆனந்தத்தாலும் அதிசயத்தாலும் கண்ணீர் வடித்துக் கூறினாள்: “என் குழந்தாய், நீ இங்கா இருக்கிறாய்? நான் நீண்ட காலமாக உன்னைத்தேடிக்கொண்டிருந்தேன். இப்போது உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். “நீண்ட காலமாக இழந்துவிட்ட மகனை மீண்டும் தான்கண்டுபிடித்து விட்டது போல அவள் மிகப்பெரும் உணர்வுடன்பேசினாள். ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ச்சி வயப்பட்டார்.
பைரவி வைஷ்ணவ தாந்திரிக இலக்கியங்களிலும் அவைகூறும் ஆன்மீக சாதனைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவள்.அவளுடைய தீவிர சாதனை அவளுக்கு அதிசயமான அனுபூதியைநல்கியிருந்தது. தன் அனுபூதியனைத்தையும் பெறக்கூடியதகுதியுடைய சாதகனை அவள் தேடிக்கொண்டிருந்தாள்.ராமகிருஷ்ணரும் தன் அனுபவங்களனைத்தையும் அவளிடம்கூறினார். அவர் அவளைத் தன் தாய்போல நேசித்தார்; அவளைத்தன் ஆன்மீக குருவாக ஏற்றார். அவள் மிக மிகக் கடுமையான தாந்திரீக சாதனைகளைக் கடைப்பிடிக்க வழிகாட்டி அவ்வழியில் அவரை நிறைவுடையவராக ஆக்கினாள்.
இராமகிருஷ்ணரைப் பற்றிய தீர்ப்பு:
இந்தச் சமயத்தில் ராமகிருஷ்ணருடைய மனம் முற்றிலும்பேதலித்துவிட்டது என்ற வதந்திகள் பரவத்தொடங்கின. மிகவும் ஆழ்ந்த பக்தியுடைய ராதா, கௌரங்கர் போன்று இறைவனுடன் ஐக்கியமாக விரும்பும் ஆழ்ந்த பக்தியுடையவர்கள் அனுபவிக்கும், சாஸ்திரங்களில் விவரிக்கப்படும் அசாதாரணமான ஆன்மீகப் பேருணர்வான மஹா பாவ நிலையில் ராமகிருஷ்ணர் இருக்கிறார் என்பதே உண்மையென்று எல்லோருக்கும் பைரவி பிரம்மணிஉறுதிப்படுத்திக் கொண்டிருந்தாள். இருப்பினும் மிகப்புகழ் பெற்றசமயப்பெரியோர்கள் சிலரிடமிருந்து இவ்விஷயத்தைக் குறித்துநிச்சயமான உண்மையை அறிய மாதுர்பாபு விரும்பினார். அக்காலத்திலிருந்த புகழ்பெற்ற அறிவாளிகளின் கூட்டத்தை அவர்கூட்டினார். வைஷ்ணவ சமூகத் தலைவர்களில் ஒருவரும்வைஷ்ணவ தத்துவ நூல்களில் மிக்கத் தேர்ச்சி பெற்றவருமானவைஷ்ணவ சரணரும், தாந்திரீகத் தத்துவத்தில் மிகப் புகழ் பெற்றபேரறிவாளியான கௌரி காந்த தர்க்க பூஷணரும், தீர்ப்பு வழங்குபவர்களாக இருக்க அழைக்கப்பட்டனர். இக்கூட்டத்தின்முடிவில் அவர்கள் ராமகிருஷ்ணர் சாதாரண துறவியல்லர் என்பதைஒப்புக்கொண்டனர். “நீங்கள் ஆன்மீக சக்தியின் சுரங்கம். இதனுடைய ஒரு அம்சம்தான் அவ்வப்போது உலகில் அவதாரங்களின் வடிவில் தோன்றுகின்றது” என்று புகழ்ந்து அவரதுதிருப்பாதங்களில் அவர்கள் விழுந்தனர். இங்ஙனம் ராமகிருஷ்ணரைச் சோதிக்க வந்த மிகப்பெரும் அறிவாளிகளும்பண்டிதர்களும் அவரது திருப்பாதங்களில் தம்மைச் சரணாகதிசெய்துகொண்டனர்.
ராமகிருஷ்ணரைத் தேடி ராம்லாலா வருகிறான்:
ஏறக்குறைய கி.பி. 1864-ல் ஜடாதாரி என்றபெயருடைய பெரிய வைஷ்ணவத் துறவி ஒருவர் தட்சிணேஸ்வரத்துக்கு வந்தார். அவர் அலைந்து திரியும் துறவியாவார். குழந்தை ராமனின்(ராம்லாலா) பக்தர். நீண்டகால தியானத்தாலும் வழிப்பாட்டாலும்அவர் பெரும் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்திருந்தார். குழந்தைராமனின் அதிசயமான தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். குழந்தை இராமனின் பேரொளி பெற்ற வடிவம் அப்போது அவருக்குவாழும் இருப்பாக ஆகியிருந்தது. அவர் எங்கு சென்றாலும்ராம்லாலாவின் விக்ரஹத்தை எடுத்துச் சென்றார். அவனுக்குப்படைக்கப்பட்ட நைவேத்தியத்தை ராம்லாலா ஏற்றுக் கொள்வதுஉண்மையில் நடைபெறும் வழக்கம். அவர் இரவும் பகலும் இவ்விக்ரஹத்துக்குத் தொண்டு செய்வதில் ஈடுபட்டிருந்தார்; இடையறாத ஆனந்த நிலையில் இருந்தார். ராம்லாலாவின் செயல்களை நேராகவே பார்க்க முடிந்த ராமகிருஷ்ணர் ராம்லாலாவைக் கவனித்துக் கொண்டு ஜடாதாரியுடன் தன் முழுநாளையும் கழிப்பார். ராம்லாலாமேலும் மேலும்ராமகிருஷ்ணருடன் மிகவும் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளலானான்.அவருடைய அறைக்குப் பின் தொடர ஆரம்பித்தான். ராம்லாலாஅவருக்கு முன்னால் அழகுடன் ஆடவும் செய்தான். சிலசமயங்களில் முதுகினில் தாவுவான். சில சமயங்களில் அவர் தன்கரங்களில் தன்னை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றுவற்புறுத்துவான். ராமகிருஷ்ணருடன் அவன் எல்லா விதமானகுறும்புகளையும் செய்வான். அவர்கள் ஒருவருக்கொருவர்பிரியமுள்ளவர்களானார்கள்.ஒருநாள் ஜடாதாரி ராமகிருஷ்ணரிடம் வந்து அழுதுகொண்டு சொன்னார், “நான் இங்கிருந்து புறப்படுவதற்கு காலம் வந்துவிட்டது. ஆனால் என்னுடன் வரமாட்டேன் உங்களுடன் தங்கிக் கொள்வேன் என்று ராம்லாலா என்னிடம் சொல்கிறான். அவனை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அவனே என்னுடையஉயிர்: அவனைப் பிரிவது எனக்கு மிகவும் துன்பமாக உள்ளது.இருப்பினும் அவன் உங்களுடன் இருப்பதில் ஆனந்தம்கொள்கிறான் என்ற எண்ணத்தால் நான் தேற்றப்படுகிறேன்”இங்ஙனம் சொல்லி ராமகிருஷ்ணரிடம் தன்னுடைய இதயமேயானபிரிய ராம்லாலாவை விட்டுவிட்டு, ஜடாதாரி தன்னுடைய வெறும்உடலை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றார்.
கிருஷ்ண தரிசனம்:
தாஸ்ய பாவ சாதனையினால் ராமகிருஷ்ணருக்கு சீதாபிராட்டியார், ஸ்ரீராமர் தரிசனம் கிட்டியது. வாத்ஸல்யபாவத்தால் அவருக்குக் குழந்தை ராமன் தரிசனம் கிட்டியது.இப்போது அவர் சக்யபாவ சாதனையை மேற்கொண்டு ஸ்ரீகிருஷ்ணருடைய தரிசனத்தை அடைந்தார். இதற்குப் பிறகுவைஷ்ணவ சாதனையின் மிக உயர்ந்த நிலையைக் கடைப்பிடிக்கஆரம்பித்தார். இந்நிலையில் வழிபடுபவன் தன்னையேராதையுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். சாஸ்வதமானகாதலனான கிருஷ்ணன் மேல் உள்ள தீவிரமான பிரேமப்பேருணர்வால் தன்னையே இழக்கிறான். இராமகிருஷ்ணர் தன்தற்போதைய ஆளுமையை அழிக்கும் முயற்சியாக, தன்னை ராதைபோல உடை அணிந்து கொண்டு பெண்களுடைய கூட்டத்தில்பெண்களில் ஒருவராக வாழத்தொடங்கினார். இந்தப் பூரணஐக்கியத்துக்கு விரைவிலேயே பரிசு கிடைத்தது. ஸ்ரீகிருஷ்ணருடைய பேரழகோடு கூடிய தரிசனம் அவருக்குக்கிட்டியது. ஸ்ரீகிருஷ்ணர் தன்னுடைய எழில் மிக்கவடிவில்ராமகிருஷ்ணருக்குத் தோன்றி அவரது ஆன்மதாகத்தைத்தணித்துநிறைவுபடுத்தினார்.பிறகு அவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்ஐக்கியமானார். ராமகிருஷ்ணர் இரண்டு, மூன்று மாதங்கள்தெய்வீகப் பேருணர்வில் திளைத்திருந்தார்.
உருவமற்ற கடவுள்தன்மையின்காட்சி(வேதாந்த அனுபூதி)
இராமகிருஷ்ணர் இப்போதுபக்தி நூல்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்தபாவம், தாஸ்யபாவம், சக்யபாவம்,வாத்ஸல்ய பாவம், மதுர பாவம் ஆகிய எல்லாவிதமானசாதனைகளையும் கடைப்பிடித்து அவைகள் ஒவ்வொன்றின்வழியாக அதே லட்சியத்தை உணர்ந்தார்.அவருடையகாட்சிகளைனைத்தும் கடவுளுடையதிருவுருவங்கள்சம்பந்தப்பட்டதாக இருந்தன. உருவமுள்ள கடவுள் நிலை ஆன்மீகஅனுபூதியில் முடிவான நிலையன்று. அறிவு, அறிபவன்,அறியப்படும் பொருள் இம்மூன்றும் பிரிக்க முடியாத பேருணர்வாக ஆகும் நிலையை, ஆகாயம் ஒன்றுமில்லாததாக மறையும்நிலையை, காலங்கடந்த சாஸ்வத நிலையை, காரண காரியங்கள் கடந்த காலத்தின் கனவாக ஆகும் நிலையை, அவர் இன்னும்அடைய வேண்டி இருந்தது.அதை அநுபவித்தவர்களே உணர்ந்தவர்களே அந்நிலையை அடைய முடியும். ஏனெனில் அதுவிவரிக்க முடியாத அனுபவமாகும்.
ஜீவன் தன் முடிவான போராட்டத்துக்குப்பிறகு ஒப்பிடப்படும்தன்மைகொண்டுஇருப்புநிலையின்கடைசித்தடையைத்தாவிபூதப் பொருளென்னும் சிறையை உடைத்து, பிரம்மத்தின்எல்லையற்ற புகழில் ஐக்கியமாகிறான்.இது அத்வைததத்துவத்தின் மிக உயர்ந்த நிலையான நிர்விகல்ப சமாதி என்றுஅழைக்கப்படுகிறது. சந்தேகத்துக்கிடமின்றி ராமகிருஷ்ணர் இந்தஅனுபவத்தை அடைவதற்கு மிகப் பொருத்தமானவரே. இதற்குரியகாலம் நெருங்கி வந்தது போலத்தோன்றியது. ஊரூராகப் போய்க்கொண்டிருக்கிற துறவியான தோதாபுரி என்பவர்தட்சிணேஸ்வரத்துக்கு வந்தார். அவர் ஞான யோகியாவார். அவர் அத்வைத தத்துவத்தில் தேர்ச்சி பெற்றதுடன் கூட, அதன்நடைமுறையான அனுபூதியையும் அடைந்தவர். “நீ வேதாந்தம்கற்றுக்கொள்ள விரும்புகிறாயா” என்று அவர் இராமகிருஷ்ணரைக்கேட்டார். இராமகிருஷ்ணர், ‘எனக்குத் தெரியவில்லை. இதுஅனைத்தும் அன்னையைச் சார்ந்துள்ளது. அவள் இதைஏற்றுக்கொண்டால்தான் நான் அதைக்கற்றுக் கொள்வேன்’ என்றுபதிலளித்தார். அப்போது ‘சரி போய் அவளைக் கேள்’ என்று தோதாபுரி சொன்னார். இராமகிருஷ்ணர் கோயிலுக்குள் சென்றுஅவருக்கு காட்சி தரும் தெய்வீகத்தாயான பராசக்தியைஆலோசனை கேட்டார். “ஆம் என் குழந்தாய், அவரிடம் போய்க்கற்றுக்கொள். இந்த நோக்கத்திற்காகத்தான் அவரை உன்னிடம்கொண்டு வந்திருக்கிறேன்”, என்று லோகமாதா கூறினாள்.ராமகிருஷ்ணர் ஒளி வீசும் முகப்பொலிவுடன் தோதாபுரியிடம்சென்று அன்னையின் அனுமதியை அவருக்கு அறிவித்தார். இதற்கிணங்க தோதாபுரி அவருக்குப் பொருத்தமானசடங்குகளுடன் தீட்சையளித்து வேதாந்தத்தின் ஆழ்ந்த நுண்ணியஉபதேசங்களை அவருக்கு வழங்கினார்.
நாம ரூபங்களைக் கடந்த ஆத்மனில் ஆழ்ந்து மூழ்கும்வண்ணம் ஆத்மனில் உறுதியாக மனதைப் பதிக்கும்படி ராமகிருஷ்ணருக்குச் சொல்லப்பட்டது. ஆனந்தகரமான மிகவும்பழக்கமான காளியின் வடிவமொன்றைத் தவிர, மற்ற எல்லாப்பொருட்களிலுமிருந்து,மனதை விடுவித்துக் கொள்வதில்ராமகிருஷ்ணருக்குக் கஷ்டம் இல்லை. தோதாபுரி ஒரு கண்ணாடித்துண்டால் இரண்டு புருவங்களுக்கும் நடுவில் லேசாய்க் கீறினார்.அம்மையத்தில் மனதைக் குவிக்கும்படி ராமகிருஷ்ணரைக் கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணர் பின்பு கூறினார்: “நான் மீண்டும்தியானம் செய்ய உட்கார்ந்தேன். லோக மாதாவின் இனிமையானவடிவம் என்முன் தோன்றியவுடனே, என் ஞானத்தை ஒரு வாளாகப்பயன்படுத்தி, அவ்வடிவத்தை இரண்டாக வெட்டினேன். இதற்குப்பிறகு என் மனதிற்குத் தடை இல்லை.அது உடனடியாகஒப்புவமையோடு கூடிய மண்டலங்களைக்கடந்து, மண்டலங்களுக்கப்பால் உயர்ந்து நான் சமாதியில் ஆழ்ந்தேன்,தோதாபுரி ஆச்சரியப்படும் வண்ணம், முதல்நாள்பயிற்சியின்போதே, ராமகிருஷ்ணர் சமாதியில் ஆழ்ந்தார்.இவர்அந்நிலையில் 3 நாட்கள் லயித்திருந்தார்.தோதாபுரிபேரதிசயமுற்று, ஆச்சரியப்பட்டார், “இது உண்மைதானா? 40வருடங்களாக அரிய தவம் செய்து அடைந்த ஒன்றை ஒரே நாளில்இம்மனிதன் அடைவது சாத்தியமா? இறைவா, இவ்வனுபவம் மிகஅதிசயமான உண்மை.” அதற்குப்பிறகு இந்த அரிய மாணவனை அத்வைத சாதனையில் நிறைவாக்க தோதாபுரிதட்சிணேஸ்வரத்தில் 11 மாதங்கள் தங்க நேர்ந்தது.
ராமகிருஷ்ணர் லோமாதாவுக்குப் பிரார்த்தனை செய்வதுமூடப்பழக்க வழக்கம் என்று தோதாபுரி நம்பினார். ஆனால், சூழ்நிலைகளும், உண்மை அனுபவமும் அவர் மனதை மாற்றி, லோகமாதாவின் இருப்பை நம்பச் செய்தன. பிரம்மனும் சக்தியும்ஒன்றேதான். ஒரே பொருளின் இரு அம்சங்கள் என்பதை அவர்உணர்ந்தார்.
தோதாபுரி கிளம்பியவுடன் ராமகிருஷ்ணர் பிரம்மநிலையில்முற்றிலும் ஒன்றி (பார்க்கும்நிலை, பார்க்கப்படும் நிலை இவற்றைக்கடந்த) தொடர்ந்து ஆறு மாதங்கள் இருந்தார். யாருமறியாதசந்நியாசி ஒருவர், ராமகிருஷ்ணரின் உடலை அப்போது காத்தார். அவர் தடியால் ராமகிருஷ்ணரை அடித்து அவருக்குத் தேக உணர்வுசற்று வந்தவுடன் சிறிதளவு உணவையும் நீரையும் அவ்வப்போதுஅவரது வாய்க்குள் புகுத்தி விடுவார். இதனால் ராமகிருஷ்ணரதுஉடல் பிராணனுடன் ஒட்டியிருந்தது. இறுதியில் லோகமாதாஉலக நன்மைக்காக தியான உணர்வுடன் இருப்பாயாக என்றுஅவருக்கு ஆணையிட்டார். அதற்குப்பிறகு படிப்படியாக அவரதுமனம் உலக நிலைக்கு வந்தது, அவருக்குத் தேக உணர்வும் வந்தது.
மற்ற சமய சாதனைகளைச் செய்தல்:முகமது, கிறிஸ்துஇவர்களின் காட்சி:
அத்வைதஉணர்வின்விளைவாக,சமயத்தின்வடிவங்களனைத்தும் நிறைவை அடைவதற்கான பல பாதைகள்என்று போற்றும் பரந்ததொரு மனப்பான்மையை ராமகிருஷ்ணர்அடைந்தார், இவ்வுண்மையை, தன் தனிப்பட்ட அனுபவம் என்றஉரைகல்லில் உரைத்துப் பார்க்க அவர் முடிவு செய்தார். முதலில்ஹிந்துவாக இருந்து பிறகு இஸ்லாமைத் தழுவிய கோவிந்தரேஎன்பவர் அப்போது தட்சிணேஸ்வரத்தில் தங்கியிருந்தார். அவர்மூலம் இஸ்லாம் சாதனைக்குத் தீட்சை செய்து கொண்டார்.ராமகிருஷ்ணர் இஸ்லாம் சாதனைகளை மிக்க ஆழ்ந்த முறையில்கடைப்பிடிக்கத் தொடங்கினார். பிற்காலத்தில் இதைப்பற்றி அவர்பின்வருமாறு கூறினார்: அப்போதுநான் அல்லாவின் நாமத்தைஇடைவிடாது சொல்லுவேன். முஸ்லீம்களுடைய பாணியில்உடைகள் அணிவேன். சீராகத் தொழுகையைச் செய்வேன். எல்லாஇந்துமத எண்ணங்களையும் என் மனதிலிருந்து வெளியே தள்ளிவிட்டேன். இந்துக் கடவுளரை வணங்குவதைநிறுத்தியதோடல்லாமல், அவர்களைப்பற்றி நினைப்பதைக் கூடவிட்டுவிட்டேன்.மூன்றுநாட்களுக்குப் பிறகு அப்பக்திநிலையின் இலட்சியத்தை நான்உணர்ந்தேன்!! முதலில்தீர்க்கத்தரிசியான முகமதுவின் தரிசனத்தை அவர் அடைந்தார்.பிறகு தனி முதலான கடவுட்தன்மையின் (அல்லா) அனுபவத்தைஅடைந்தார்.
பலஆண்டுகளுக்குப்பின்,கிறிஸ்துவ மதத்தின்அனுபவத்தையும் அவர் அடைந்தார். ஒருமுறை தெய்வீகக்குழந்தையான இயேசுவை ஏந்தி நிற்கும் அன்னை மேரியின்ஓவியத்தை அவர் மிக்கக் கவனத்துடன் பார்த்துக்கொண்டுகிறிஸ்துவின் அதிசயமான வாழ்க்கையைநினைத்துக்கொண்டிருந்தபோது அவ்வோவியம் உயிர் பெற்றதோ என்னும்படி அவர் உணர்ந்தார். மேரி, கிறிஸ்து இவர்களின் வடிவங்களிலிருந்து திடீரென ஒளிக்கற்றைகள் தோன்றி அவரது இருதயத்தில் புகுந்தன.கிறிஸ்துவக் கோயில்கள், கிறிஸ்துவ பக்தர்கள், கிறிஸ்துவப்பிராத்தனைகள் இவற்றைப் பற்றி 3 நாட்கள் தொடர்ந்துகாட்சிகளைப் பெற்றார். 4-வது நாள் அவர் பஞ்சவடியில் நடந்துகொண்டிருந்தபோது, கிறிஸ்து அவரை நெருங்கி வந்துஆலிங்கனம் செய்து அவருள் ஐக்கியமாவதைப் பார்த்தார்.ராமகிருஷ்ணர் அதிசயித்தார். ‘ஆ இவர் மனிதகுலத்தின் மீட்சிக்காகத்தன் இதயத்தின் இரத்தத்தைச் சிந்தியவரும், மனிதகுலத்துக்காகத் துன்புற்றவருமான அன்பின் திருவுருவமான தலைசிறந்த யோகியான கிறிஸ்து ஆவார்,’
ராமகிருஷ்ணர் புத்தருக்குகூட வழிபாடு செய்வது வழக்கம்.‘புத்தர் கடவுளின் அவதாரம் என்ற இந்துக்களால் நம்பப்படுகிறார்.ராமகிருஷ்ணர் புத்தரைப்பற்றிக் கூறினார். ‘புத்தர் விஷ்ணுவின்திருவவதாரம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அவருடையகொள்கைகளுக்கும்வேதத்தின்உபதேசங்களுக்கும் வேறுபாடில்லை.’
அவர் தன்னறையில் தீர்த்தங்கரர் மஹாவீரரின் சிறுவிக்கிரகத்தைக் கூட வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும்இவர் விக்கரகத்தின் முன்பு ஊதுவத்திகொளுத்துவார்.
சீக்கிய குருமார் பத்துபேரும் அரசர் ஜனகரின் அவதாரங்கள்என்று ராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்வார்.
வேதாந்தத் தத்துவத்தின் மூன்று ஒழுங்கமைப்புக்களானதுவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் இவற்றைப்பற்றி அவைமூன்றும் மனிதன் இலட்சியத்தை நோக்கிச் செல்லும் முன்னேற்றப்பாதையில் வெவ்வேறு நிலைகள், அவை ஒன்றுக்கொன்றுமுரண்பட்டவை அல்ல என்றும் கூறினார். அவை பல்வேறுமனோபாவங்களுக்கும், மனிதர்களின்பல்வேறுமனோவளர்ச்சிக்கும் தகுந்தவாறு அமைந்து, ஒன்றுடன் ஒன்றுஇணைந்தவை என்றும் கூறினார்.
ராமகிருஷ்ணர் சீடர்களுக்குப் பிற்காலத்தில் கூறியது:
ஒரு பெரிய குளத்தில் பல படித்துறைகள் உண்டு. ஹிந்துக்கள் குடத்தில் தண்ணீரை இழுத்துக்கொண்டு, அதை ஜலம்என்கின்றனர். முகமதியர்கள் தோல்பைகளில் தண்ணீரை நிரப்பிப்கொண்டு, அதனை பானி என்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதனைவாட்டர்’ என்கின்றனர். நாம், தண்ணீரென்பது ஜலமுமல்ல,பானியுமல்ல, வாட்டருமல்ல என்று கருதினால் அது எவ்வளவு அபத்தமானது? ஆதாரவஸ்து, பலபொருள்களுள்ள ஒன்றேயாகும்;ஒவ்வொருவரும் அதனை நாடுகிறார்கள்.
உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் ஒரு படித்துறை.ஒவ்வொரு படித்துறைக்கும் உள்ளார்ந்த தீவிர இதயத்துடன் செல்க.நித்யானந்தம் என்ற நீரை அடைவீர்கள். ஆனால் உங்கள் மதம்மற்றதைவிடச் சிறந்தது என்ற கூறாதீர்கள். ஒரே இறைவனை, பல்வேறு கோட்பாடுகள் பல்வேறுமார்க்கங்கள் மூலம் தேடுகின்றன.கல்கத்தாவில் உள்ள காளி கட்டத்தில் உள்ள காளி மாதாவின் கோவிலுக்கு இட்டுச் செல்லும்வழிகள் வெவ்வேறானவை. அது போல மனிதரை இறைவனின்வீட்டுக்கு இட்டுச் செல்லும் பாதைகள் வெவ்வேறானவை. ஒவ்வொரு மதமும், அத்தகைய வழியாகும்.
மனமும் அறிவும், விசிஷ்டாத்வைதம் கூறிய அளவுக்குஅனுபவம் பெற்று, கூற இயலும். அதற்கு மேல் இயலாது.பரிபூரணத்தில், முழுமையும் அதன் வெளிப்பாடும் ஒரேவிதத்தில்உண்மையானவை. இறைவனின் திருநாமம், அவரது இருக்கை,இறைவன்ஆகமூவருக்கும் ஆன்மீகத் தன்மையேஅடிப்படையாகும்.எல்லாம்ஆன்மீகமயமானவை; உருவங்களில்தான் வேறுபாடெல்லாம். அனுபவ உணர்வில் அத்வைதந்தான் கடைசி நிலை சமாதிநிலையில்தான் அதனை உணர இயலும். அதுமனோ வாக்குஇவற்றைக் கடந்தது தான் அனுபவித்த அதிசயமான ஆன்மீகப் போராட்டங்களும்அனுபவங்களும் அவருக்காக அல்ல. ஆன்மீக மறுமலர்ச்சிக்கானபுது சகாப்தத்தைக் கொண்டு வரவும் கடவுள் சிருஷ்டிகர்த்தா,அவரது சிருஷ்டி பற்றிய உண்மையை அறிவதற்கான மார்க்கங்களில்உள்ள தடங்கல்களைச் சமாளிப்பது எவ்வாறு என்று மனிதகுலத்துக்கு எடுத்துக்காட்டவும் அவை ஏற்பட்டன என்பதைஉணர்ந்தார்.
அன்னை சாரதாதேவி:
ராமகிருஷ்ணரும் சாரதாதேவியும் பெயரளவில்தான்கணவனும் மனைவியும். தெய்வ சங்கற்பந்தான் அவர்களை ஒன்றுசேர்த்தது; அது தூய்மையான, புனிதமான,ஆன்மீகத்தோழமையாகும். அவர் சாரதா தேவியை புனித காளிமாதாவாகவேகருதி வழிப்பட்டார். அவளும் அவரைத் தெய்வீக அவதாரம் என்றுபோற்றினாலும், அன்னை குழந்தையைப் பராமரிப்பது போலப்பராமரிக்க நேர்ந்தது. அவர்களிடையே நிலவிய அன்பு, ஆன்மீகஅன்பாகும். தன்னலமற்ற தூய்மையான பிரேமையாகும். 1872-ம்ஆண்டு,18-வதுவயதில் சாரதாதேவிதட்சிணேஸ்வரத்துக்கு கணவனிடம் வந்து சேர்ந்தாள். அங்குராமகிருஷ்ணரின் அன்னையுடன் பக்கத்திலுள்ள அறையில்தங்கினாள்.
சாரதாதேவி அங்குவந்த இரண்டுமாதங்களில்ராமகிருஷ்ணர் காளிமாதாவுக்கு ஷோடசி பூஜை நடத்தினார்.எல்லோரும் வியப்புறும் வகையில், தேவிக்காக மலர்களால்அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் சாரதாதேவியை உட்காரும்படிகேட்டுக் கொண்டார். அவளே காளிமாதா என்று, சாரதா தேவியின்முன்னிலையில் வணங்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.அவளை மலர்களாலும் பூஜா திரவியங்களாலும் வழிபாடு செய்தார்.அவர்களிருவரும் சமாதியிலாழ்ந்தனர். சமாதியிலிருந்துவெளியுலக உணர்வுக்கு வந்ததும், ராமகிருஷ்ணர் மறுபடியும்அவள் காலடியில் வணங்கிரீங்காரம் செய்யும் குரலில் கூறுவார்: ஓ! ஜகன் மாதா! ஓ ஜகத் ஜனனி! உங்கள் காலடியில் நான் இத்தனைஆண்டுகள் செய்த சாதனை முழுவதையும் அர்ப்பணிக்கிறேன்.இதனை, கூடிய சீக்கிரம் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில்,உன்னைச் சூழ இருக்கும் உன் குழந்தைக்களுக்கு வாரிவழங்கவும்! வாரி வழங்கு. தாராளமாக வாரி வழங்கவும்.
இவ்வாறு ராமகிருஷ்ணர்அவதாரபுருஷராகவும், சாரதாதேவிஅவதாரசக்தியாகவும் உலகில்தனதுபுனிதப்பணியைத் தொடர்வதற்கு பூரணப் பொலிவுடன் விளங்கினர்.விவேகாநந்தர், பிரம்மானந்தர், நிரஞ்சனானந்தர், பிரேமாநந்தர் போன்ற கணக்கில்லாத குழந்தைகளைப் பராமரிக்கும் ஜகன்மாதாவாகவும் ஜகத் பிதாவாகவும் இருவரும் இருக்கிறார்கள்.
சாரதாதேவி, ராமகிருஷ்ணருக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தமயமான லோகமாதாவின் திருவுருவாக விளங்கினார்.
ராமகிருஷ்ணரின் யாத்திரை- ராணி ராஸ்மணி, மாதுர் பாபு இவர்களின் நல்லாசி மிக்க இறுதிக்காலம்:
ராணிராஸ்மணியின்மருமகனான மாதுர்பாபுராமகிருஷ்ணரை முதலிலிருந்து ஒரு அதிசய மனிதர் என்றும்அவருடன் தமக்குத் தொடர்பு ஏற்பட்டது,தாம் செய்த தவப்பயன் என்றும் கருதினார். ராமகிருஷ்ணரின் விபரீத வழிகள் மாதுர்பாபுவை சங்கடத்திலாழ்த்தின. சில சமயங்களில் அவர்,ராமகிருஷ்ணர் கபடமற்ற வெள்ளை உள்ளம் படைத்தவர் என்பதுஒரு புறம் இருக்க, உண்மையிலேயே சுயபுத்தியுடன் இருந்தாரா என்பதைச் சந்தேகிக்கவும் செய்தார். ஆனால் பற்பல இயற்கைச்சக்திகளுக்கு அப்பாற்பட்ட சில சம்பவங்கள், அவரிடமுள்ள சிரத்தையையும், பக்தியையும் வேரூன்றச் செய்தன. ஒரு முறைராமகிருஷ்ணர், ராணி ராஸ்மணியைக் கோவிலில் கண்டித்த போது,மாதுர் பாபுவின் மனம் வருந்தியது. ஆனால் ராணிராஸ்மணி, அவரிடம் “அது ராமகிருஷணருடைய தவறல்ல; கோவிலின் புனிதச்சூழலில் சொத்து சம்பந்தமான அற்பமான சொந்த விஷயங்களில்மனம் ஈடுபட்டது இறைவனுக்குத் துரோகம் செய்ததுபோலாயிற்று, அவர் கண்டித்ததால்தான் எனக்கு சுய அறிவு திரும்பவும்வந்தது. அவர் நமது மிகுந்த மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர்”. ஆனால் மாதுர் பாபு மனச்சமாதானமடையவில்லை. சிலநாட்கள் கழித்து நடந்த ஒரு அதிசய சம்பவம் அவரது சங்தேகங்களைப் போக்கி, இராமகிருஷ்ணரிடம் அசையாதநம்பிக்கையை வேரூன்றச் செய்தது. ஒருநாள் மாதுர்பாபு கோவில்அலுவலகத்தில்ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது,ராமகிருஷ்ணர் தாழ்வாரத்தில் அங்கும் இங்கும் சென்றுக்கொண்டுதனக்குள் பைத்தியம்போல ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மாதுர் பாபு அவரை நோக்கிக் கொண்டிருக்கையில் கண்கள் அதிசயத்தால் விரிந்தன. தன்கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. நான் கனவு காண்கின்றேனா இது உண்மைதானா என்று கேட்டுக்கொண்டார். சில சமயம் லோகமாதாவையும், சில சமயம் ஜடாமகுடதாரியான சிவனையும், சில சமயம் ராமகிருஷ்ணரையும் கண்டார். இந்தஅபூர்வமான தரிசனத்தினால் அவர் பரவசமுற்றார். ராமகிருஷ்ணர் அத்தெய்வங்களின் திருவுருவே என்று கொண்டார். மாதுர்பாபு ஓடிவந்து ராமகிருஷ்ணரின் காலடிகளில் விழுந்து என்னைமன்னியுங்கள்; என் செல்வத்தாலும், அகந்தையாலும், கர்வத்தாலும்என் அறிவு குருடாக இருந்தது. அன்னை என் கண்னளைத்திறந்தாள்” என்று கதறினார். பின் ராமகிருஷ்ணரிடம் தனதுதரிசனத்தை விவரித்தார். ராமகிருஷ்ணர் வழக்கம் போல,குழந்தையுள்ளத்துடன் கூறினார். ஓ! இதெல்லாம் அன்னையின்திருவிளையாடல். நான் அங்குமிங்கும் நடந்தபோது,ஜய் பைரவி ஜய் மகாதேவ்’ என்று வெறுமே சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மாதுர்பாபுராமகிருஷ்ணர்வெறுமே ஜபம் செய்யவில்லை, மிகுந்த பிரேமையுடன் கூட தான்உச்சரித்த திருநாமங்களால் குறிக்கப்பட்ட திருவுருவங்களுடன்அவர் ஒன்றி விட்டார் என்பதை உணர்ந்தார்.
சில மாதங்கள் கழித்து ராணி ராஸ்மணி காலமானார்.அச்சமயம் இரவு நேரம். ஒரு பெரிய எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ‘விளக்கினை அணையுங்கள், விளக்கிளை அணையுங்கள்’ என்று ராணி கூவினார். ‘பவதாரிணி தேவி இங்குவந்து கொண்டிருப்பதையும் அவளது பேரொளியால் வீடுமுழுவதும் பிரகாசமாயிருப்பதையும், நீங்கள் காணவில்லையாவாருங்கள் அம்மா வாருங்கள்’ என்று கூறிக்கொண்டே அவளது -ஆவி அன்னையுடன் ஒன்று கலந்தது. அவளது முகத்தில்அமைதியுடன் கூடிய புன்னகை நிலவியது. ராணி ராஸ்மனி இறக்கவில்லை, லோகமாதாவின் ஆனந்த நிலைக்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறித்தது. ராணியின் காலத்துக்குப் பின் எல்லாக்கோயில்களுக்கும், உடைமைகளுக்கும் மாதுர்பாபு தான் -முழுப்பொறுப்பு, அதே சமயத்தில் ராமகிருஷ்ணரின் உடல்நலத்தையும் அவரே கவனித்துக் கொண்டார். சாரதாதேவியார்தட்சிணேஸ்வரம் வருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்மாதுர்பாபு, ராமகிருஷ்ணரையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டுஒரு யாத்திரைக்குக் கிளம்பினார்.
வழியில் உள்ள மக்களின் வறுமையையும் துன்பத்தையும்கண்ட ராமகிருஷ்ணரின் மனம் உருகியது. தியோகரில், அவர்மதுரபாபுவிடம் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அனைவருக்கும்வயிறார உணவளிக்கும்படியும், அவர்கள் அனைவருக்கும் துணிமணிகள் வழங்கும்படியும் கூறினார். இதற்குப் பணச் செலவு அதிகமாயிற்று. முதலில் மாதுர்பாபு மனமிசையாவிட்டாலும், ராமகிருஷ்ணர் தீவிரமாகவும் பிடிவாதமாகவும் இருந்ததால், இதற்கிணங்க வேண்டியதாயிற்று. இவர்களெல்லாரும் தரித்திர நாராயணர்கள், இவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ளவேண்டும், அதுவே கடவுளை உண்மையாக வழிபடுதல் ஆகும்என்று கூறினார். அக்கிராம மக்களுக்கு இவ்வாறு உணவளித்து, துணிகள் வழங்கவில்லையானால் தான் பின்தங்கப் போவதாகவும்,தொடர்ந்து வரப்போவதில்லை யென்றும் கூறினார்.
அவர்கள் கங்கை நதியின் குறுக்கே படகு வழியாகவாரணாசியை நெருங்கியபோது, சிவனுக்குரிய அந்நகரம், ஆன்மீகஉணர்வுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டது போன்றும் தங்கநிறத்துடனும் அவருக்குக் காட்சியளித்தது. மணிகர்ணிகாபடித்துறையை அவர்கள் கடந்தபோது, ‘மகா தேவர் ‘புனிதமந்திரத்தை எரியும் உடலின் காதில் கூறுவதையும், பார்வதிதேவிஅதனை அணுகி வானுலகம் செல்ல உதவி செய்வதாகவும் கண்டார்.ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டவாறு, ‘காசியில் இறக்க முக்தி’ என்றவாக்கின்படியே இந்த தரிசனம் அமைந்திருந்தது. யாத்திரைக் குழுவினர் ஸ்ரீ கிருஷ்ணரின் கணக்கற்ற இனியநினைவுகள் நிறைந்த பிருந்தாவனத்துக்கும் மதுராவுக்கும் விஜயம்செய்தனர். அங்கிருந்த பதினைந்து நாட்களிலும் ராமகிருஷ்ணர்பாவனா சமாதியில் ஆழ்ந்திருந்தார். அந்தக் குழுவினர் கயாவுக்கு விஜயம் செய்வதாகத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் ராமகிருஷ்ணரே அங்கு செல்லவேண்டாம் என்று மாதுர் பாபுவைத் தடுத்துவிட்டார். அந்தப்புனித இடத்தில் கால் வைத்ததுமே, உடலை விட்டு ஆவிபிரிந்துவிடும் என்று எண்ணினார். கயாவில் அவர் தந்தையின்தரிசனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்; அங்கு மனம்இறைவனிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும் என்று உணர்ந்தார்.மக்களை நல்வாழ்வுப்படுத்துவதற்கான பணிக்கு லோகமாதாவின்கருவியாகத்தான் பயன்படுத்தப்படப் போவதாக அவர் உறுதியானநம்பிக்கையுடன்இருந்தார். ஆகவே அக்குழுவினர் கயா செல்லாமல் கல்கத்தா திரும்பினர்.
ராமகிருஷ்ணரை மாதுர் பாபு சந்தித்து பதினாறு வருடங்கள்ஆகிவிட்டன. ராமகிருஷ்ணருடன் கொண்ட தொடர்பின் பலனாகமாதுர்பாபு முழுமையான ஆன்மீக மாற்றம் பெற்றார். 1871-ம்ஆண்டு ஜூலை மாதம், மிகவும் நோய்வாய்ப்பட்டு விழுந்தார்.காளிகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அன்று ராமகிருஷ்ணர் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் ஆழ்ந்த சமாதியில்இருந்தார். சுமார் மாலை 5 மணிக்கு சமாதியிலிருந்து கண் விழித்து ஹிருதயரைக் கூப்பிட்டு மாதுரின் ஜீவன் அன்னையுடன்கலந்துவிட்டது என்று கூறினார். இரவு வெகுநேரம் கழித்துமாதுர்பாபு சரியாக மாலை 5 மணிக்கு காலமாகி விட்டதாகதட்சிணேஸ்வரத்திற்குத் தகவல் கிடைத்தது. ராமகிருஷ்ணர் மிகுந்த ஆன்மீக சாதனையில் ஈடுபட்ட காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மாதுர்பாபு எவ்வளவுபாக்கியம் செய்தவர்! அவரது மாமியாரைப் போலவே, அவரும் ராமகிருஷ்ணரிடமும் அன்னையிடமும் கொண்டுள்ள பக்தியினால் நற்கதி பெற்றார்.
அவரது சீடர்கள் – விவேகாநந்தரும் மற்றவரும்
1879-ம் ஆண்டிலிருந்து சீடர்கள் ராமகிருஷ்ணரிடம் வந்துகுழுமிய வண்ணம் இருந்தார்கள். எளிய மக்கள் மட்டுமல்ல,அறிவுமிகுந்த தற்காலப் படிப்பு படித்த இளைஞர்களும் அவரது தாக்கத்தால் நல்வழியடைய அவர் கருவியாக இருந்தார். நம்பிக்கையற்ற பலர் இவர் யாரென்று வேடிக்கை பார்க்கும்ஆவலுடன் வந்தனர். வந்து அவரிடம் தொடர்பு கொண்டபின் தமது அவநம்பிக்கையை விலக்கிக் கொண்டார்கள். இறைவன்இருக்கிறார் என்பதற்கு ஸ்தூலமான நிரூபணமாக இவரைக்கண்டார்கள். அவர் காலமாகும் வரை ஏழு வருடங்கள் வந்தவர்களிடமெல்லாம் இறைவனைப்பற்றி உபதேசித்துக்கொண்டிருந்தார். இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகின் மூலை முடுக்குகளெங்கும் இந்தியாவின் ஆன்மீக ஒளிவிளக்கைக்கொண்டு சென்ற விவேகானந்தர் போன்ற ஆக்க சக்தி மிகுந்தஇளைஞர்களாகசீடர்கள் குழுவினை உருவாக்கினார்.தொன்மையான ஆன்மீக உண்மைகளை வெளிக்கொணர்ந்துஅவை என்றும் நிலைத்த பயனுள்ளவை என்பதை ஐயமறநிரூபித்துக் காட்டினார்.
இறுதிக்கட்டம்
ராமகிருஷ்ணரின் வாழ்வின் கடைசிக்கட்டம், ஒரு புறத்தில்மனமுருக்கும் வண்ணம் துயரம் நிறைந்ததாக இருந்தாலும்,மறுபுறம் அற்புதமான சூரிய அஸ்தமனத்தின் அழகினையும்,நளினத்தையும் மாட்சிமையையும் கொண்டதாக இருந்தது.ஆன்மீக மறுமலர்ச்சியை நாடி மக்கள் அவரை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்காக உடலின் சக்திக்கு மிஞ்சியஅளவில் தன்னை வழங்கிய வண்ணம் இருந்தார். இதனால் அவர்உடல் நலம் குலைந்தது.
1885-ம் ஆண்டு, பிராரப்த கர்மம் தன்வழியை நடத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிப்படி, அவருக்குத் தொண்டையில்வலியேற்பட்டது. அது கவலைக்கிடமாக மாறியது. அவர்கல்கத்தாவிலிருந்து விசாலமான காஸிப்பூர் தோட்டத்துக்கு கூட்டிச்செல்லப்பட்டார்.அவரது சீடர்களான நரேந்திரநாதரும்மற்றவர்களும் அன்னைசாரதாதேவியும் இடைவிடாது அவருக்குபணிபுரிந்த வண்ணம் இருந்தனர். ராமகிருஷ்ணர், ஸ்தூலநிலையில்தன் வாழ்வின் முடிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்தார். நரேந்திரநாதரை தனது ஆன்மீக வாரிசாக நியமித்து, மற்ற எல்லாசீடர்களையும் அவரதுஅரவணைப்பில்ஒப்படைத்தார். ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார். நரேந்திரனுக்கு ராம நாமமந்திரத்தை உபதேசம் செய்தார். நரேந்திரரிடம் அது அற்புதமானமாறுதலை உண்டுபண்ணியது அவர் உடனே தெய்வீகப்பரவசத்தில் ஆழ்ந்தார்..
ராமகிருஷ்ணர் சமாதியடைவதற்கு சில நாட்களுக்கு முன் நரேத்திரனைத் தன்னருகில் அழைத்தார். அப்போது அறையில் வேறு யாருமில்லை. நரேந்திரனை அவருக்கு முன் உட்கார வைத்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சமாதியிலாழ்ந்தார். நரேந்திரர், தன்னுடலுக்குள் மின் அதிர்ச்சி தருவது போன்ற சூட்சம சக்தி பாய்வதை உணர்ந்தார். கொஞ்சங் கொஞ்சமாக அவரும்வெளியுணர்வை இழந்தார். சுய நினைவுக்கு மறுபடியும்வந்த போது, ராமகிருஷ்ணர் முகத்தில் கண்ணீர் வழிவதைக் கண்டார், குருநாதர் அவரிடம் கூறினார்:என்னுடைய சக்திகளையெல்லாம் உனக்களித்து விட்டு நான் பக்கிரியாகி விட்டேன். இந்த சக்தியைக் கொண்டு, நீ உலகிற்கு மாபெரும் நன்மையைச் செய்வாய். இவ்வாறு, உலகின் நன்மையை முன்னிட்டு., ஆன்மீகவிளக்குஎரிந்துக்கொண்டிருப்பதற்காக, தன்னுடையஆன்மீகசெல்வங்களனைத்தையும் நரேந்திரனுக்கு ராமகிருஷ்ணர் வழங்கிவிட்டார்.
இரு நாட்கள் கழித்து, குருநாதர் துன்பப்படுவதைக்கண்டபோது, குருநாதர் தெய்வீகமானவர்தானா என்ற சந்தேகம்நரேந்திரர்மனதில்ஏற்பட்டது. வியத்தகுமுறையில்அந்தஎண்ணம்அவருக்கு வந்த அதேநேரத்தில், ராமகிருஷ்ணர் ”அன்றுராமனாகவும் கிருஷ்ணனாகவும் இருந்தவன்தான் இப்போதுராமகிருஷ்ணராக இருக்கிறார், வேதாந்தக் கருத்திலல்லஉண்மையாகவே” என்று முணுமுணுத்தார். பலதடவைகள்இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்ட பின்னும் குருநாதரைச்சந்தேகித்ததற்காக நரேந்திரர் மிகவும் மனத்துயரமுற்றார்.
1886-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி ஞாயிறன்றுமாலை குருநாதர் சமாதியிலாழ்ந்தார். நடு இரவுக்குப் பின் அவர் சுயநினைவு பெற்றார். காளியின் நாமத்தை மும்முறை தெளிவாகக்கூறினார். திடீரென்று ஒருமணி 2 நிமிடங்கள் போது, அவர் கண்கள்மூக்கின் நுனியில் நிலை பெற்றன. அவர் முகம் புன்னகையினால்மலர்ந்து ஒளி வீசியது. குருநாதர் மஹா சமாதியடைந்தார்.
இவ்வாறு, இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் புகழொளிபெற்ற சகாப்தங்களில் ஒன்று முடிவடைந்தது. விவேகாநந்தர்கூறியவாறு, மறை நூல்கள் அனைத்தும் கோட்பாடுகள்அடங்கியவையே. இவரே அனுபவம், அனுபவசாரம். இந்த மனிதர்தனது ஐம்பத்தொரு ஆண்டுகளில் நாட்டின் ஆன்மீக வாழ்க்கையின்ஐயாயிரம் ஆண்டுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்தி வாழ்ந்தார்.பிற்கால சந்ததியினர் அனைவருக்கும் உதாரண புருஷராக,பாடமாகத் திகழ்ந்தார்.ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வேதாந்தம் போன்றோ, தெய்வவழிபாடு போன்றோ ஒரு பகுதியை மட்டுமல்ல, ஹிந்துமதத்தின்முழுமையான சுழற்சியைக் குறிக்கிறது. அவர் ஞானியும்,பக்தருமாவர். அவருக்கு, இறைவன் வழிபடும் கடவுளாகவும்,உருவமற்ற பரம்பொருளாகவும் விளங்கினார். துறவும்யோகசாதனையும் கொண்ட சந்நியாச வாழ்க்கைக்கும். குடும்பவாழ்க்கைக்கும்ஒரேவிதமுக்கியத்துவம்கொடுத்தார்.ஒழுங்கான முறையில்செயல்படுத்தினால், மதம்மனிதனுக்குவிடுதலையளிக்கும் சக்தியுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார்.
ராமகிருஷ்ணரின் ஆன்மீக ஒளி இன்றும் பிரகாசம் தந்துகொண்டே இருக்கிறது; இனியும் அது ஒளி தந்து கொண்டேஇருக்கும். அவரது உபதேசங்களைப் போற்றி மனதில்வைத்துக்கொண்டு, அவற்றின்படி வாழ்வதற்கு நாம் முயற்சிசெய்வோமாக.
“உங்கள் கடமையைச் செய்யுங்கள்; ஆனால் இறைவனிடம்உங்கள் மனதை வைத்திருங்கள். இறைவனிடம் பக்தியைவளர்த்துக் கொள்வதற்கு முன் உலகக்காரியங்களில் பங்குகொண்டால், அவற்றில் நீங்கள் அதிகம் சிக்கிக் கொள்ள நேரிடும்.பலாச்சுளையை எடுப்பதற்கு முன், நாம் கையில் எண்ணெயைத்தடவிக்கொள்கிறோம். அப்போதுதான், பலாப்பிசின் நமது கையில்ஒட்டாது”.
வானில்எவ்வளவோநட்சத்திரங்களை இரவில்காண்கிறீர்கள்; ஆனால் சூரியன் உதயமாகும்போது அவைஒன்றையும் காண்பதில்லை. ஆகையால் பகற்பொழுதில் வானில்நட்சத்திரங்களே இல்லை என்று சொல்வீர்களா? அதுபோல, மனிதா!உன்அறியாமையின்போது கடவுளைக் காணவில்லையென்றால், கடவுளே இல்லையென்று கூறாதே.
எந்த முறையிலும் இறைவனைப் பிரார்த்தனை செய்யலாம்.உன் பிரார்த்தனையை அவர் கேட்பதுறுதி. ஏன், ஒரு எறும்பின்காலடிச்சத்தத்தையும் அவர் கேட்கவே செய்கிறார்.
[Reference: Gurus Guide – Path Divine Group III Balvikas]