இந்து மதம்

Print Friendly, PDF & Email
இந்து மதம் – முக்கியமான நற்போதனைகள்:
  1. கடவுள் அனைவருள்ளும் ஆத்மஸ்வரூபமாக பரிணமிக்கிறார். (திவ்யாத்மஸ்வரூபங்கள்)
  2. ஒன்றே ஆன ஆத்மா அனைத்து உயிரினங்களையும் இறைவனுடன் ஒன்றிணைக்கிறது.(பிரஹ்மன்)
  3. இறைவன், சர்வாந்தர்யாமி, சர்வவியாபி.
  4. வினை விதைத்தவன் வினை அறுப்பான்-இன்பமும் துன்பமும் நாம் செய்யும் வினைக்கேற்ப அமைகிறது. (கர்ம விதி)
  5. மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும் மனிதன் பிறக்கிறான்-(புனரபி ஜனனம் புனரபி மரணம்)
  6. தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், மனிதனை தர்ம வழியில் அழைத்துச் செல்வதற்கும் தேவையான காலங்களில் இறைவன் பூமியில் அவதாரம் எடுக்கிறார். (அவதாரங்களைப் பற்றிய கருத்துரு)
  7. அனைத்து மார்க்கங்களும் இறைவனிடமே இட்டுச் செல்கின்றன.
  8. மனித வாழ்க்கையின் இலட்சியம் இறைவனை அடைதலே.(நான்கு புருஷார்த்தங்கள்- தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்)
  9. இந்த இலட்சியத்தை அடைய மதம் உதவுகிறது.

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் முக்கியத்துவம்